மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது வடக்கு மாகாணசபை

பரபரப்பான சூழலில் வடக்கு மாகாணசபையின் அமர்வு இன்று காலை இடம்பெறவுள்ளது. அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

ராடர்களால் கடற்படையினருக்கு பாதிப்பு வராதா? – சிறிதரனின் கேள்வியால் வாயடைத்த சுவாமிநாதன்

இரணைதீவு மக்களை மாற்று இடங்களில் குடியமர்த்துவது தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சரணடைந்தோர், கைதுசெய்யப்பட்டோர் விபரங்களை வெளியிடுமாறு கட்டளை- சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும், படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு முப்படையினர் மற்றும் சிறிலங்கா காவல்துறையினருக்கு இன்று கட்டளையிடுவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் தீவிர ஆலோசனை – முடிவை நாளை அறிவிப்பார்?

தம்மால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினால் இரண்டு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை அறிக்கையை அவையில் சமர்ப்பித்தார் முதலமைச்சர் – விவாதம் ஒத்திவைப்பு

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை இன்று வடக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவாதத்தை வரும் 9ஆம் நாள் நடத்துவதற்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் – பரபரப்பான சூழலில் இன்று கூடவுள்ளது வடக்கு மாகாணசபை

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்த மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கை தொடர்பாக வடக்கு மாகாணசபையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

பளை துப்பாக்கிச் சூடு- சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி பிணையில் விடுதலை

பளையில் சிறிலங்கா காவல்துறையினரின் ரோந்து வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி உடனடியாகவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஐங்கரநேசன், குருகுலராசா பதவி விலக வேண்டும் – விசாரணைக்குழு அறிக்கையில் பரிந்துரை

வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சர் குருகுலராசாவும், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும், பதவியில் இருந்து விலக வேண்டும் என்று, வட மாகாண  அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

பளை துப்பாக்கிச் சூடு – உரும்பிராய் இளைஞன் சந்தேகத்தில் கைது

பளை- கச்சார்வெளிப் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக உரும்பிராயைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 10 பாரஊர்திகளில் உதவிப் பொருட்கள் அனுப்பிவைப்பு

சிறிலங்காவின் தென், மேல், சப்ரகமுவ மாகாணங்களில் கடந்தமாத இறுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, வடக்கில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் உதவிப் பொருட்கள், நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.