மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

தீயுடன் சங்கமமானார் அப்பாத்துரை விநாயகமூர்த்தி – பெரும் திரளானோர் அஞ்சலி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகள் சடடவாளருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் இறுதி நிகழ்வுகள் நேற்று பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை வெளிப்படுத்தக் கோரி பாரிய போராட்டம்

கடத்தப்பட்டும், படையினரிடம் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பளை துப்பாக்கிச் சூடு – முக்கிய துப்புகள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தகவல்

பளை- கச்சார்வெளியில் சிறிலங்கா காவல்துறை வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பாக முக்கியமான பல துப்புக்கள் கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்ய முடியும் என்றும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

வடக்கின் அபிவிருத்தி குறித்து சிறிலங்கா பிரதமர் ஆய்வு

வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பருத்தித்துறை துறைமுகத்தை பார்வையிட்டார்.

பளை துப்பாக்கிச் சூடு- யாரும் சிக்கவில்லையாம்

பளை- கச்சார்வெளிப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரின்  ரோந்து வாகனம் மீது நேற்று அதிகாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பளைப் பகுதியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு? – சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்துத் தேடுதல்

பளைப் பிரதேசத்தில் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றையடுத்து, அங்கு பெருமளவு சிறிலங்கா படையினர், சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாவற்குழியில் புதிய விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

நாவற்குழியில் புதிய பௌத்த விகாரை ஒன்றுக்காக தாதுகோபத்தை அமைப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் அடிக்கல் நாட்டியுள்ளனர்.

சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரிடம் முதலமைச்சர்

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன்சனிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

செம்மணியில் தொடங்கிய இனப்படுகொலை நினைவேந்தல் வார நிகழ்வுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் நேற்று முதல் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சுன்னாகம் படுகொலை – 6 சிறிலங்கா காவல்துறையினருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

சுன்னாகம் காவல் நிலையத்தில் சந்தேக நபரான இளைஞன் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில், காவல்நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 சிறிலங்கா காவல்துறையினருக்கு தலா 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.