மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

திறக்கப்பட்டது யாழ். விமான நிலையம் – தரையிறங்கியது முதல் விமானம்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பலாலியில் பரீட்சார்த்தமாக தரையிறங்கியது அலையன்ஸ் எயர் விமானம்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத் திறப்பு விழா நாளை நடக்கவுள்ள நிலையில், எயர் இந்தியாவின் அலையன்ஸ் எயர் விமானம் ஒன்று நேற்று பலாலி விமான நிலையத்தில் பரீட்சார்த்தமாக தரையிறக்கப்பட்டது.

ஐந்து தமிழ்க் கட்சிகள் கையெழுத்திட்ட பொது உடன்பாட்டு ஆவணம்

ஐந்து தமிழ் கட்சிகளால் கையெழுத்திடப்பட்டுள்ள பொது இணக்க ஆவணம்- தமிழ் தேசம், அதன் இறைமை, தமிழ் மக்களின்  சுயநிர்ணய உரிமை, சமஷ்டித்  தீர்வு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை  முன்வைத்து, தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தல் – ஐந்து தமிழ்க் கட்சிகள் பொது உடன்பாட்டில் கைச்சாத்து

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில், ஆறு தமிழ்க் கட்சிகளுடன், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, பொது இணக்கப்பாட்டு ஆவணத்தில் ஐந்து கட்சிகள் இன்று கையெழுத்திட்டன.

முன்னாள் புலி உறுப்பினர் வீட்டில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு – மூவர் கைது

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிவாஜிலிங்கத்துக்கு பாதுகாப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிமொழி

தமக்குப் போதிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய உறுதி அளித்துள்ளார் என்று அதிபர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும், எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ்க் கட்சிகள் சந்திப்பு – பொது இணக்கத்துக்கு முயற்சி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

பேரெழுச்சியுடன் யாழ். நகரில் எழுக தமிழ் பேரணி

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் இன்று எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடைபெற்றது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், இந்தப் பேரணி இடம்பெற்றது.

வடமராட்சி களப்பில் மழைநீரை தேக்கும் பாரிய திட்டம்

யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்காக, வடமராட்சி களப்பில், மழைநீரைத் தேக்கி வைத்து விநியோகிக்கும் திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பளை மருத்துவமனை பொறுப்பதிகாரி சிறிலங்கா இராணுவத்தினரால் கைது

கிளிநொச்சி- பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சி.சிவரூபன் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.