சிறிலங்கா வான்பரப்பில் நுழைந்து தேடுதல் நடத்திய இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம்
இந்தியக் கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு விமானம் சிறிலங்கா எல்லைக்குள் நுழைந்து தேடுதல்களை நடத்தியதாக இந்தியக் கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியக் கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு விமானம் சிறிலங்கா எல்லைக்குள் நுழைந்து தேடுதல்களை நடத்தியதாக இந்தியக் கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள, உடுப்பி மாவட்டத்தில் சிறி மூகாம்பிகா அம்மன் ஆலயத்துக்கான பயணத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மோசமான காலநிலையால், இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பிராந்திய பாதுகாப்புச் சூழலில் சீனா தனது தலையீட்டை தொடர்ந்தும் வலுப்படுத்தி வருவதாக இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஸ்டிர மாநில பாடநூல்களில் இடம்பெற்றிருந்த, சிறிலங்கா தொடர்பான கொள்கையில் ராஜீவ்காந்தியின் தோல்வி பற்றிய குறிப்புகளை அகற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் சிறிலங்கா கடற்படைக்காக கட்டப்பட்ட ‘சயுரால’ என்று பெயரிடப்பட்டுள்ள ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நாளை கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளது.
அண்டை நாடுகளைக் கைளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்.
இந்தியாவின் 14ஆவது குடியரசுத் தலைவராக பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 17ஆம் நாள் நடந்த தேர்தலில் இவர் 66.65 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரும், சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவருமான நிருபம் சென் புதுடெல்லியில் நேற்று காலமானார்.
புதுடெல்லியில் விகாரை ஒன்றையும், சிறிலங்கா கலாசார நிலையம் ஒன்றையும் அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களுக்கும், தேவையான காணிகளை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.
எந்த நாட்டினது தாக்குதல் ஆயுதங்களும் சிறிலங்காவின் எல்லைக்குள் அனுமதிக்கப்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.