மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையே நாளை சந்திப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நாளை கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று  நடத்தப்படவுள்ளது.

இந்திய, மாலைதீவு கடலோரக் காவல்படைகளுடன் சிறிலங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி

இந்திய மற்றும் மாலைதீவு கடலோரக் காவல்படைக் கப்பல்களுடன் இணைந்து சிறிலங்கா கடற்படை நான்கு நாள் கூட்டுப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாப்பரசரின் பயணத்தை அண்டி தேர்தல் நடத்த வேண்டாம் – கத்தோலிக்கத் திருச்சபை கோரிக்கை

பாப்பரசர் பிரான்சிஸ் திட்டமிட்டபடி சிறிலங்கா வருவார் என்றும், பாப்பரசரின் வருகைக்குப் பின்னர், அதனை அண்டியதாக தேர்தல் எதையும் நடத்த வேண்டாம் என்று தாம் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளதாகவும், கத்தோலிக்க ஆயர்கள் கூட்டமைப்பின் ஊடகச் செயலாளரான வண.பிதா. சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

வத்திக்கான் குழு கொழும்பு வந்தது – பாப்பரசரின் பயணம் குறித்து முடிவு செய்யும்

சிறிலங்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலால், பாப்பரசர் பிரான்சிசின் சிறிலங்காப் பயணம் குறித்த சந்தேகங்கள் நீடிக்கும் நிலையில், பாப்பரசரின் பயணம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக வத்திக்கானில் இருந்து மூன்று பிரதிநிதிகள் நேற்று கொழும்பு வந்துள்ளனர்.

கட்டாரில் இருந்து திரும்பிய முன்னாள் போராளி கட்டுநாயக்கவில் கைது

கட்டாரில் இருந்து கொழும்பு திரும்பிய விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.