மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

அபிவிருத்தியின் பெயரால் தமிழ் மக்களின் காணிகளை சூறையாட அனுமதியோம் – கூட்டமைப்பு

வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளை சூறையாடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கத்திடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகப் பதவியேற்றார் சரத் பொன்சேகா

பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பதவியேற்றுள்ளார்.

இந்தியாவின் காலனித்துவ நாடாக மாறுகிறது சிறிலங்கா – உதய கம்மன்பில குற்றச்சாட்டு

கலிங்கப் பேரரசின் காலத்தைப் போன்று, மீண்டும் இந்தியாவின் காலனித்துவ நாடாக சிறிலங்கா மாறும் சூழல் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

அரசியல் தீர்வு முயற்சிகளை எவரும் குழப்பக் கூடாது – நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை

புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணிகளை யாரும் குழப்புவதோ அல்லது காலதாமதப்படுத்துவதோ கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித உரிமை வாக்குறுதிகளை காப்பாற்றத் தவறிவிட்டது சிறிலங்கா – அனைத்துலக மன்னிப்புச் சபை

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் கடந்த ஆண்டு பதவியேற்றபோது, மனித உரிமைகள் தொடர்பாக கொடுத்திருந்த வாக்குறுதிகள் பலவற்றைக் காப்பாற்றத் தவறியிருப்பதாக, அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம்சாட்டியுள்ளது.

ஐந்து அரசியல் கைதிகள் இன்று நீதிமன்றினால் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து தமிழ் அரசியல் கைதிகள் இன்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தியாவுடன் திருட்டுத்தனமாக உடன்பாடு செய்து கொள்ளமாட்டோம்- ரணில்

அடுத்தமாதம் முதல்வாரம் கொழும்பு வரவுள்ள இந்தியக் குழுவுடன் நடத்தப்படும் பேச்சுக்களை அடுத்தே, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கான வரைவு தயாரிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று திடீரென 4 பாகை செல்சியசால் எகிறிய வெப்பநிலை

யாழ்ப்பாணத்தில் நேற்று வழக்கத்தை விடவும் 4 பாகை செல்சியஸ் அதிகமான வெப்பநிலை நேற்று பதிவானதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் கொழும்பு வந்தார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர்கள் சபையின் தலைவரான, தகேஹிகோ நகோ இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக நேற்றுமாலை சிறிலங்கா வந்தார். அவர் நேற்று சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

அனுராதரபுர, மகசின் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யக் கோரி,  அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை  நேற்று ஆரம்பித்தனர்.