மேலும்

Archives

19 ஆவது திருத்தச்சட்டத்தை ஒழித்தால் தான் நாட்டுக்கு விமோசனம் – மைத்திரி

சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு, அரசியலமைப்பின் 18 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கல்முனையில் ஒருவரின் உண்ணாவிரதம் தொடர்கிறது- களத்தில் ஞானசார தேரர்

கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவர் தவிர்ந்த ஏனையோர், பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரின் வாக்குறுதியை அடுத்து தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு 1 பில்லியன் யென் கொடை வழங்குகிறது ஜப்பான்

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, ஜப்பான் 1 பில்லியன் யென், நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.

கல்முனை போராட்டம் தீவிரம் – கிழக்கில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில் முன்னெடுக்கப்பட்டு வரும், உண்ணாவிரதப் போராட்டமும், அதற்கு ஆதரவான போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன.

அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா கடற்படை தளபதியுடன் ஆலோசனை

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை, சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்ற பாதுகாப்புக்கு கருவிகளை வழங்கியது சீனா

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு  33 மில்லியன் ரூபா பெறுமதியான பாதுகாப்புக் கருவிகளை சீன அரசாங்கம் கொடையாக வழங்கியுள்ளது.

சிறிலங்கா வந்துள்ள சீன அரசின் உயர்மட்டப் பிரதிநிதி

சீன அரசின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, அரசியல் உயர்மட்டங்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ போர்க்கப்பல்

இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ என்ற போர்க்கப்பல் நேற்று நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க இராணுவ நிபுணர்கள் திருகோணமலையில் பயிற்சி

சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு படையைச் சேர்ந்த வான்வழி தரையிறக்க அணியினால் திருகோணமலையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

புடினுக்கு அழைப்பு விடுத்தார் சிறிலங்கா அதிபர் – அமெரிக்காவின் தடை குறித்தும் பேச்சு

ரஷ்யாவில் இருந்து சிறிலங்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் மீது, அமெரிக்கா விதித்துள்ள தடைகள் தொடர்பாக, சிறிலங்கா, ரஷ்ய அதிபர்கள் கலந்துரையாடியுள்ளனர்.