நிமலராஜன் படுகொலை விசாரணை தொடர்பான அறிக்கை வெளியீடு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை, சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை, சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் நாள் இரவு 10 மணியளவில் யாழ்ப்பாண நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக அப்போது இருந்த, கச்சேரியடிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார்.
வடக்கு, கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களையும் பொதுவாக நினைவு கூரும் நாளாக, ஒக்ரோபர் 19ஆம் நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.