மேலும்

Tag Archives: மகிந்த ராஜபக்ச

இந்தியத் தூதரைச் சந்திக்க தொடர்ந்து தூது விடும் மகிந்த – நழுவும் புதுடெல்லி

சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச, இந்திய அதிகாரிகளைச் சந்திப்பதற்கு தொடர்ந்து, தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்றும், எனினும், தற்போதைய சூழ்நிலையில், அவரிடம் இருந்து விலகியிருக்க புதுடெல்லி முடிவு செய்திருப்பதாகவும், எக்கொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனது வீட்டுக்கு மகிந்த வந்தது உண்மை – ஒப்புக் கொள்கிறார் எஸ்.பி.திசநாயக்க

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில், தனது வீட்டில் இரகசியப் பேச்சுக்கள் ஏதும் நடத்தப்படவில்லை என்று, அண்மையில் கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபருடன் இரகசியச் சந்திப்பு -மறுக்கிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை தாம் சந்தித்துப் பேச்சு நடத்தவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விரைவில் சிறிலங்கா அதிபராகப் போகிறாராம் மகிந்த – சுவாமியின் ஆரூடம்

சிறிலங்காவின் அதிபராக விரைவில் பொறுப்பேற்கப் போகிறவர் என்று  புதுடெல்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில் மகிந்த ராஜபக்சவை அறிமுகப்படுத்தியிருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி.

என் அனுபவத்தில் பாடம் கற்றுள்ளார் மைத்திரி – என்கிறார் மகிந்த

தனது அனுபவத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பாடம் படித்துள்ளார் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பலம் காட்ட முனையும் கூட்டு எதிரணி- முறியடிப்பு முயற்சியில் அரசு தீவிரம்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக, எதிர்வரும் 5ஆம் நாள் கொழும்பில் பாரிய பேரணி ஒன்றை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி தயாராகி வரும் நிலையில், இந்தப் பேரணியை முறியடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கமும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாட்டை இராணுவமயப்படுத்த முனைகிறது கூட்டு அரசாங்கம் – மகிந்த குற்றச்சாட்டு

சிறிலங்கா அரசாங்கம் நாட்டை இராணுவ மயப்படுத்த முனைவதாகவும், இது ஆபத்தான நிலை என்றும் எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு சம்பந்தனை அழைத்தார் மகிந்த

தாம் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் இணைந்து செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

நியூயோர்க் ரைம் செய்தி – அவசர செய்தியாளர் சந்திப்புக்கு சீன தூதரகம் அழைப்பு

மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்கு, சீனா நிதி அளித்தது என்று நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தியை அடுத்து,  கொழும்பில் உள்ள சீன தூதரகம் அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

சீனாவிடம் கடன் பெற்றது இராஜதந்திரம் என்கிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சீனாவிடமிருந்து கடன் பெற்றது ஒரு இராஜந்திரமே என்று கூறியுள்ளார், முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச.