மேலும்

Tag Archives: தேர்தல்

மைத்திரியின் உரைக்குத் தடைவிதித்தார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த செவ்வாய்க்கிழமை மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வெளியிட்ட கருத்தை, இலத்திரனியல் ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தடைவிதித்துள்ளார்.

சிறிலங்கா தேர்தல் கண்காணிப்பில் 3 வெளிநாட்டுக் குழுக்கள் – அமெரிக்க குழுவுக்கு இடமில்லை

சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க மூன்று வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் வரவுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் குழுத் தலைவராக மகிந்த நியமனம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் குழுத் தலைவராக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக, கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தினேஸ் குணவர்த்தன அறிவித்துள்ளார். 

கை சின்னத்தில் தனித்துக் களமிறங்கப் போகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அதன் கை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து, தீவிரமான உள்ளக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டுப்பணம் கையேற்கிறது சிறிலங்கா தேர்தல் திணைக்களம்

சிறிலங்காவில் எதிர்வரும்  ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடம் இருந்து கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அஞ்சல் மூலம் வாக்களிக்க ஜூலை 14ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் வரும் ஜூலை 3ஆம் நாள் தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று சிறிலங்கா தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

20ஐ நிறைவேற்றாமல் நாடாளுமன்றம் கலைக்கப்படாது – ராஜித சேனாரத்ன

தேர்தல் முறையை மாற்றியமைக்கும் 20ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரையில், நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களைக் குறைக்கக் கூடாது – நாடாளுமன்றில் சம்பந்தன்

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இன்னும் 15- 20 ஆண்டுகளுக்கு, ஒன்பதை விடவும் குறைக்கப்படாமல் இருப்பதை, புதிய தேர்தல் முறை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளை நள்ளிரவு கலைக்கப்படுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை – 24ஆம் நாள்- நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்கவுள்ளதாக நம்பகமான வட்டாரங்களை மேற்கொள்காட்டி சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் சிறிலங்கா அதிபருடன் தொலைபேசியில் பேச்சு

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளார். இதுதொடர்பாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,