மேலும்

Tag Archives: இந்தியா

சீன நீர்மூழ்கிகளின் வருகை குறித்து இந்தியாவுக்குத் தெரியுமாம் – மகிந்த கூறுகிறார்

சீனக் கடற்படையின் நீர்மூழ்கிகள் கொழும்பில் தரித்து நிற்பது குறித்து இந்தியாவுக்குத் தெரியும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

கொழும்பு திரும்பிய சம்பந்தன் கூட்டமைப்பு பிரமுகர்களுடன் ஆலோசனை

மூன்று வாரங்களாக இந்தியாவில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று கொழும்பு திரும்பியதை அடுத்து, சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு விரைவில் வெளியிடப்படும் என்று தெரியவருகிறது.

நாடு திரும்புகிறார் சம்பந்தன் – 27 நாள் வெளியாகிறது கூட்டமைப்பின் நிலைப்பாடு

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு வரும் 27ம் நாள் வெளியிடப்படும் என்று, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு இரு போர்க்கப்பல்களை விற்கிறது இந்தியா

சிறிலங்காவுக்கு இரண்டு போர்க்கப்பல்களை இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளதாக, இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் தெரிவித்துள்ளார்.

போர் வெற்றிக்குப் பங்களித்த அனைவரையும் பாதுகாப்பேன் – மைத்திரி வாக்குறுதி

தாம் வெற்றி பெற்றால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் எவரையும் முன்னிறுத்த அனுமதிக்கமாட்டேன் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கூச்சல் எழுப்பியதால், கோபத்தில் பாதியில் நின்றது மகிந்தவின் உரை

தம்புள்ளையில் ஆளும்கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உரையாற்றிய போது, அங்கிருந்தவர்கள் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்ததால், ஆத்திரத்தில் தனது பேச்சை முடித்துக் கொண்டு கீழ் இறங்கிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கூட்டமைப்பை புதுடெல்லி அழைக்கவில்லை – சுமந்திரன்

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக வெளியான செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

சீன நீர்மூழ்கி விவகாரம் – மௌனத்தை உடைத்தார் சுஸ்மா சுவராஜ்

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான எந்தச் செயலிலும் தாம் ஈடுபடமாட்டோம் என்று சிறிலங்கா அரசாங்கம், மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று காலை நேபாளம் செல்கிறார் மகிந்த – நரேந்திர மோடியுடன் முக்கிய சந்திப்பு

நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் 18வது சார்க் மாநாடு நாளை ஆரம்பமாகவுள்ளது. இருநாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய எட்டு உறுப்பு நாடுகளினதும், தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஒரு நாளில் 40 ஆயிரம் கப்பல்களைக் கண்காணிக்கும் பொறிமுறையை உருவாக்குகிறது இந்தியா

இந்தியப் பெருங்கடலில் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இந்தியா உருவாக்கவுள்ள மிகப்பெரிய கண்காணிப்பு வலையமைப்பினால், நாளொன்றுக்கு, 40 ஆயிரம் கப்பல்களைக் கண்காணிக்க முடியும் என்று இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.