மேலும்

பிரிவு: செய்திகள்

மூன்று பெண் சாதனையாளர்களுக்கு “நோர்வே தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருது

நோர்வே தமிழ் 3 வானொலியினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் “தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருதுகள் இம்முறை மூன்று பெண் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா தொடர்பாக நாளை அறிக்கை வெளியிடுகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரி்மைகள் பேரவையின் 31ஆவது அமர்வில், சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நாளை உரையாற்றவுள்ளார்.

சிறிலங்காவுக்கு புத்தாயிரம் ஆண்டு சவால் உதவி – அமெரிக்க குழு மைத்திரியை சந்திப்பு

சிறிலங்காவுக்கு புத்தாயிரம் ஆண்டு சவால் (மிலேனியம் சவால்) திட்டத்தின் கீழ் மீண்டும் உதவியளிக்க அமெரிக்கா முன்வந்துள்ள நிலையில், இதுதொடர்பாக பேச்சுக்களை நடத்த உயர்மட்டக் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.

பிரகீத் கடத்தல் – எல்லா ஆவணங்களையும் ஒப்படைக்க இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய எல்லா ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு, ஹோமகம நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

தமிழ்மக்களை அழிக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களை சிறிலங்கா இராணுவம் நடத்தவில்லையாம்

இறுதிக்கட்டப் போரின் போது, தமிழ்மக்களை அழிக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொள்ளவில்லை என்று சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில், நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யோசிதவுக்கு எதிரான மின்னஞ்சல் ஆதாரங்கள் வெளிநாட்டில் இருந்து அழிப்பு

யோசித ராஜபக்சவுக்கு எதிரான நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களாக கருதப்படும்,மின்னஞ்சல்கள் பலவும் திட்டமிட்டு ஒரு குழுவினராலோ, தனிநபராலோ அழிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 158 பேர் தடுத்து வைப்பு – அமைச்சர் சுவாமிநாதன் தகவல்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 158 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தகவல் வெளியிட்டுள்ளார், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.

தமிழரை பாரபட்சத்துடன் நடத்துகிறது, வாக்குறுதியை மீறுகிறது அரசாங்கம் – சம்பந்தன் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கமும் தமிழர்களைப் பாரபட்சத்துடன் நடத்துவதாக குற்றம்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தகைய நிலை தொடர்ந்தால் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.

சிறிலங்காவில் 3 குடிநீர் திட்டங்களுக்கு இந்தியா 400 மில்லியன் டொலர் கடனுதவி

சிறிலங்காவில் மூன்று குடிநீர் விநியோகத் திட்டங்களை மேற்கொள்வதற்கு 400 மில்லியன் டொலர் கடனுதவியை இந்தியா வழங்கவுள்ளது.  இதுதொடர்பான உடன்பாடு நேற்று இந்தியாவின் எக்சிம் வங்கிக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் பாகிஸ்தான் அதிபர்

சிறிலங்காவுக்கு குறுகிய காலப் பயணம் ஒன்றை மேற்கொண்ட பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசெய்ன், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.