மேலும்

பிரிவு: செய்திகள்

ரணில் மீண்டும் குத்துக்கரணம் – இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லையாம்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக இன்னமும் இறுதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எக்காரணம் கொண்டும் வடக்கில் படைக்குறைப்பு நடக்காது – படையினருக்கு வாக்குறுதி

வடக்கில் இருந்து எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறிலங்காப் படையினரைக் குறைக்கப் போவதில்லை என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன உறுதியளித்துள்ளார்.

கிழக்கு முதலமைச்சராக ஹபிஸ் நசீர் பதவியேற்பு – அம்பாறையில் கடும் எதிர்ப்பு.

கிழக்கு மாகாணசபையின்  புதிய முதலமைச்சராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஹபிஸ் நசீர் அகமத் இன்று  மாலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மைத்திரியின் இந்தியப் பயணம் உறுதி – வரும் 15ம் நாள் புதுடெல்லி செல்கிறார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு வரும் 15ம் நாள் இந்தியா செல்லவுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகமும், இந்திய வெளிவிவகார அமைச்சும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையிடாதாம் சீனா

சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யவோ, இன்னொரு நாட்டுக்கு எதிராக சிறிலங்காவைப் பயன்படுத்தவோமாட்டது என்று சீனா உறுதியளித்துள்ளது.

சீனாவிடம் பணிந்தது மைத்திரி அரசு – கொழும்பு துறைமுக நகர திட்டத்துக்கு அனுமதி

கொழும்புத் துறைமுக நகர கட்டுமானத் திட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு சிறிலங்காவின் புதிய அரசாங்கம், சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்துக்கு  அனுமதி அளித்துள்ளது.

ஏழரை இலட்சம் டொலருக்கு அமர்த்தப்பட்ட வெளிநாட்டு ஆலோசகரை நீக்கியது புதிய அரசு

மோசமான நடத்தையால் அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டொமினிக்  ஸ்டர்ரஸ் கானை சிறிலங்காவின் புதிய அரசாங்கம், வெளிநாட்டு முதலீட்டு ஆலோசகர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது.

மங்கள சமரவீரவின் இரண்டாம் கட்ட களையெடுப்பு – 36 இராஜதந்திரிகளை நாடு திரும்ப உத்தரவு

அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் இராஜதந்திரிகளாக நியமிக்கப்பட்ட 36 பேரை நாடு திரும்புமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு பணித்துள்ளது.

கே.பி நாட்டைவிட்டு வெளியேற நீதிமன்றம் தடை

விடுதலைப் புலிகளின் முன்னைய ஆயுதக் கொள்வனவாளரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று சிறிலங்காவின் மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியாவில் சிறிலங்கா காவல்துறை அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் காயம்

வவுனியாவில் ரோந்து சென்ற சிறிலங்கா காவல்துறையினர் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.