6 சிறிலங்கா இராணுவத்தினர் கைது – மூவருக்கு விளக்கமறியல்
முல்லைத்தீவு- முத்தையன்கட்டுக் குளம் இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு, தாக்கப்பட்ட ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து 6 சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு- முத்தையன்கட்டுக் குளம் இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு, தாக்கப்பட்ட ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து 6 சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – முத்தையன்கட்டு சிறிலங்கா இராணுவ முகாமில் பழைய இரும்பு பொருட்கள் இருப்பதாக அழைக்கப்பட்டவர்களில் ஒருவர், காணாமல் போன நிலையில் அடிகாயங்களுடன், குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி கோரி, மன்னாரில் நேற்று அமைதி பேரணி நடத்தப்பட்டுள்ளது.
வவுனியா- கூமாங்குளம் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் விபத்துக்குள்ளாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, நேற்றிரவு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
வவுனியா வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்பட்டுள்ள தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமான திரிவைச்சகுளம் பகுதியில் 300 ஏக்கருக்கும் அதிகமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்றாவது பங்காளிக் கட்சியான ரெலோவும் முடிவு செய்துள்ளது.
வடக்கையும், கிழக்கையும் அபிவிருத்தி செய்வதற்கான வெளிநாட்டு உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக, கொடை நாடுகளின் இரண்டு மாநாடுகளை கூட்டப் போவதாக, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கடந்தமுறை தவறு செய்து விட்டார்கள் என்று குற்றம்சாட்டிய பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தமுறை அவ்வாறான தவறைச் செய்யமாட்டார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் தீர்த்தக் கேணியில் பௌத்த பிக்குவின் சடலத்தை எரித்த சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவில் இன்று பாரிய கண்டன பேரணி இடம்பெற்றது.