மேலும்

செய்தியாளர்: Vanni

நீராவியடி ஆலயம் அருகே பிக்குவின் உடல் தகனம் – காற்றில் பறந்த நீதிமன்ற உத்தரவு

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்த, பௌத்த பிக்குவின் சடலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ஆலய வளாகப் பகுதியில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

நீராவியடி ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் சடலத்தை தகனம் செய்ய முயற்சி

முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து, பௌத்த விகாரையை அமைத்த கொழும்பு மேதாலங்கார  கீர்த்தி தேரர் புற்றுநோயால் நேற்று மகரகம மருத்துவமனையில் மரணமானார்.

மதவாச்சியில் நள்ளிரவு விபத்து – யாழ். சென்ற மூவர் பலி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சிற்றுந்துடன், பாரஊர்தி ஒன்று பக்கவாட்டில் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? – வட்டுவாகலில் கவனயீர்ப்புப் போராட்டம்

போரின் இறுதிக்கட்டத்தில்  சிறிலங்கா படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று முல்லைத்தீவு – வட்டுவாகலில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தினர்.

திருக்கேதீச்சர வரவேற்பு வளைவு உடைப்பு – பரவலாக அதிருப்தி, கண்டனம்

மன்னார் – திருக்கேதீச்சர ஆலயத்துக்குச் செல்லும் வீதியின் முகப்பில் அமைக்கப்பட்ட வரவேற்பு வளைவு அகற்றப்பட்ட சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்துள்ள அதேவேளை, வரவேற்பு வளைவை மீண்டும் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி போராட்டத்தில் குழப்பம் விளைவித்த ‘கறுப்புச் சட்டைக்காரர்கள்’

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில், கறுப்புச் சட்டை அணிந்து கொண்டு வந்த சிலர் குழப்பம் விளைவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கதறலால் கலங்கியது கிளிநொச்சி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்  கவனத்தை ஈர்க்கும் நோக்குடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் இன்று காலை, பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

மன்னார் புதைகுழி- அதிகாரபூர்வ ஆய்வறிக்கை நீதிமன்றத்துக்கு கிடைக்கவில்லை

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான, றேடியோ கார்பன் அறிக்கை அதிகாரபூர்வமாக மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்று, நீதிவான் சரவணராஜா தெரிவித்துள்ளார்.

2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாயாறில் விகாரை – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் சாட்சியம்

முல்லைத்தீவு – நாயாறில் குருகந்த ரஜமகாவிகாரை  2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், அங்கு பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன இருந்தன என்று  சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வவுனியாவில் பாரிய போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வழங்கக் கோரி வவுனியாவில் நேற்று பாரிய கவனயீர்ப்புப் போராட்டமும் பேரணியும் நடத்தப்பட்டது.