மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

தேசியப்பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமில்லை – மைத்திரி அதிரடி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் தேசியப் பட்டியலில் இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா  அதிபரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு, வன்னி மாவட்ட வேட்பாளர்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வன்னி மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பொன் செல்வராசா தலைமையிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.

கூட்டமைப்பு இன்று வேட்புமனுத் தாக்கல் – மீண்டும் திருமலையில் களமிறங்குகிறார் சம்பந்தன்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வடக்கு, கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளது.

திடீரென நாட்டை விட்டு வெளியேறினார் சந்திரிகா – மைத்திரி மீது அதிருப்தி?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கும் விவகாரத்தில், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ள சூழலில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க திடீரென நேற்றிரவு பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கொழும்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

நேற்றே சுபநேரத்தில் வேட்புமனுவில் கையெழுத்திட்டு விட்டாராம் மகிந்த – பசில் தகவல்

அடுத்த மாதம் நடக்கவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எந்த மாவட்டத்தில் மகிந்த போட்டி? – இன்னமும் உறுதியற்ற நிலை

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்கு நாளை வேட்பு மனுவில் கையெழுத்திடுவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ள போதிலும், இன்னமும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மகிந்த குருநாகலவில், சமல் அம்பாந்தோட்டையில் போட்டி?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருநாகல மாவட்டத்திலும், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மனோவுடன் கூட்டமைப்பு அவசர பேச்சு – கொழும்பு, கம்பகாவில் போட்டியிட முயற்சி

வடக்கு, கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக, மனோ கணேசனுடன் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தியுள்ளது. கொழும்பில் நேற்று மாலை இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மகிந்த, கோத்தா, பொன்சேகாவை கொல்ல முயன்ற குற்றச்சாட்டு- ஒப்புக்கொள்கிறார் லெப்.கேணல்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரை படுகொலை செய்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரி குற்றத்தை ஒப்புக்கொள்ள சம்மதித்துள்ளார்.