மேலும்

மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு விரைவில் பொதுமன்னிப்பு?

மிருசுவிலில் எட்டு தமிழ்ப் பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யவுள்ளார் என்று இரண்டு கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னாள் இராணுவ ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளார் என்று ராஜபக்ச ஆதரவு ஊடகமான அருண செய்தி வெளியிட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் எட்டு பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில், இவருக்கு 2015 ஆம் ஆண்டு, கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் மரணதண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.

சிறிலங்கா அதிபராக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர், மரணதண்டனைக் கைதியான சுனில் ரத்நாயக்க விடுதலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், சிறிலங்கா அரசாங்கம் அதனை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *