மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

சுவிஸ் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டாரா?- மறுக்கிறது சுவிஸ் அரசு

சிறிலங்காவில் இருந்து சுவிற்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீற்றர் மொக் திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்திகளை சுவிஸ் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

எம்சிசி கொடை உடன்பாடு – கையெழுத்திடத் தயாராகும் சிறிலங்கா

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் கொடை உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்குத் தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கோத்தா – மோடி ஒரு மணி நேரம் தனியாக பேச்சு 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தனியாக ஒரு மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று மதியம் ஹைதராபாத் ஹவுசில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

யுஎன்டிபியின் ஆசிய- பசுபிக் பிராந்திய பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழ்ப் பெண்ணான, கன்னி விக்னராஜா ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின் (யுஎன்டிபி) ஆசிய -பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளராக நாளை டிசெம்பர் 1ஆம் நாள் பதவியேற்கவுள்ளார்.

இணையதள செய்தி நிறுவனத்தில் சிறிலங்கா காவல்துறை தேடுதல்

மீரிஹானவில் உள்ள Newshub.lk இணையத்தள செய்தி நிறுவன பணியகத்தில் சிறிலங்கா காவல்துறையினர் நேற்றுக்காலை தேடுதல் நடத்தியுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சரை போட்டி போட்டு சந்தித்த இந்திய, சீன தூதுவர்கள்

சிறிலங்காவின் இடைக்கால அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக தினேஸ் குணவர்த்தன பொறுப்பேற்றதை அடுத்து, வெளிநாட்டுத் தூதுவர்கள்கள் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அச்சுறுத்தலால் நாட்டை விட்டு வெளியேறினார் புலனாய்வு அதிகாரி நிசாந்த சில்வா

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு வந்த சிறிலங்கா காவல்துறை தலைமை ஆய்வாளர் நிசாந்த சில்வா, அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் நியமனம் இன்று நடைபெறாது?

புதிய இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனம் மற்றும் அவர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று நடைபெற வாய்ப்புகள் இல்லை என்று அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தா – மோடி சந்திப்பில் ‘13’ குறித்துப் பேசப்படாது?

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 29ஆம் நாள் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, 13ஆவது திருத்தச்சட்டம் குறித்து கலந்துரையாடப்படமாட்டாது என்று தகவல்கள் கூறுகின்றன.

எம்சிசி கொடை உடன்பாடு சாத்தியமில்லை

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்தின்  கொடையை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் கோருவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.