மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் மைத்திரி – அமைச்சவை திங்களன்று பதவியேற்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு வாழ்த்துக் கூறினார் சீனத் தூதுவர்

சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகி்ந்த ராஜபக்சவை, சீன தூதுவர் சென் ஷியுவான் இன்று மாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இருந்து வெளியேற ரணிலுக்கு நாளை காலை 8 மணி வரை காலக்கெடு

ரணில் விக்ரமசிங்க நாளை காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி காலக்கெடு விதித்துள்ளது.

ரணிலுக்கு ஹக்கீம், றிசாத், மனோ ஆதரவு – மகிந்தவின் பக்கம் டக்ளஸ், தொண்டா

கூட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த தமிழ், முஸ்லிம் கட்சிகள், சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தொடருவதற்கு, தொடர்ந்தும் ஆதரவளிக்க, முன்வந்துள்ளன.

சிறிலங்கா இராணுவமும், காவல்துறையும் தமது கட்டுப்பாட்டில் என்கிறார் மங்கள

சிறிலங்கா இராணுவமும், காவல்துறையும் தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக, கூட்டு அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்த மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் வசமானது சிறிலங்கா அரச ஊடகங்கள் – ஒளிபரப்புகள் நிறுத்தம்

சிறிலங்காவில் நேற்று கூட்டு அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அரச ஊடகங்களின் பணியாளர்கள் அச்சுறுத்தப்பட்டதுடன், நள்ளிரவில் அரச தொலைக்காட்சிகளான ரூபவாஹினி மற்றும் ஐரிஎன் என்பனவற்றை மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அரச ஒளிபரப்புகள் செயலிழந்தன.

புதிய அமைச்சரவை நியமனம் உடனடியாக இல்லை

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நியமனம், உடனடியாக இடம்பெறாது என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்காவில் பாரிய அரசியல் குழப்பம் – மகிந்தவின் நியமனம் செல்லுமா?

மகிந்த ராஜபக்சவை சிறிலங்காவின் பிரதமராக இன்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதால், அரசியல் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

கூட்டு அரசு கவிழ்ந்தது – சிறிலங்கா பிரதமராக பதவியேற்றார் மகிந்த

சிறிலங்காவின் பிரதமராக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பதவியேற்றுள்ளார்.  ஐதேக- சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்த கூட்டு அரசாங்கம் கவிழ்ந்ததை அடுத்தே, இந்த திடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளது.

அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில், தாம் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.