ஐ.நா, மேற்குலக அழுத்தங்களால் அடுத்தவாரம் நாடாளுமன்றைக் கூட்ட ஆலோசனை
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கான முயற்சிகளில், ஐ.நா மற்றும் மேற்குலக இராஜதந்திரிகள் இன்று கொழும்பில் முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கான முயற்சிகளில், ஐ.நா மற்றும் மேற்குலக இராஜதந்திரிகள் இன்று கொழும்பில் முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.
சிறிலங்காவில் புதிதாகப் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு கிடைக்காத நிலையில், ரஷ்யாவிடம் உதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச, இந்திய அதிகாரிகளைச் சந்திப்பதற்கு தொடர்ந்து, தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்றும், எனினும், தற்போதைய சூழ்நிலையில், அவரிடம் இருந்து விலகியிருக்க புதுடெல்லி முடிவு செய்திருப்பதாகவும், எக்கொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு சிறிலங்கா அதிபர் செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.
சிறிலங்காவுக்கான அமெரிக்கா மற்றும் ஐ.நாவின் தூதுவர்கள் சபாநாயகர் கரு ஜெயசூரியவைச் சந்தித்து அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மீண்டும், ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் திரும்பி வந்துள்ளனர்.
சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 10 ஆக குறைக்க, காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.
ஜனநாயகத்துக்கு முரணான ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், நாடாளுமன்றத்தைக் கூட்டும் வரை அலரி மாளிகையை பாதுகாப்பது என்று ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக, அந்தக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று காலை தகவல் வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவின் உள்நாட்டு அரசியல் குழப்பங்களில் சீனா தலையீடு செய்யாது என்று, கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்துடன் நெருக்கமான தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.