மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

6 குண்டுவெடிப்புகளில் குறைந்தது 10 பேர் பலி –  நூற்றுக்கணக்கானோர் காயம்

சிறிலங்காவில் இன்று காலை மூன்று தேவாலயங்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் நிகழ்ந்த ஆறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு தேவாலயத்திலும் குண்டுவெடிப்பு – 25 பேர் பலி, 300 பேர் காயம்

மட்டக்களப்பில் உள்ள தேவாலயம் ஒன்றிலும் இன்று காலை குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 3 ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் குண்டுகள் வெடிப்பு

கொழும்பு – நகரில் உள்ள பிரபலமான மூன்று,  ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் இன்று காலை குண்டுவெடிப்புகள்  இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் இரு தேவாலயங்களில் குண்டுகள் வெடிப்பு – பலர் பலி?

கொழும்பு- கொட்டாஞ்சேனையில் உள்ள கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திலும், நீர்கொழும்பு – கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் இன்று காலை ஒரே நேரத்தில் குண்டுகள் வெடித்ததில் பலர் கொல்லப்பட்டனர். 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

சுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு – நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்குவதற்காக மில்லியன் கணக்கான டொலர் நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 13 பேர் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சுவிஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, சுவிஸ் சட்டமா அதிபர் முறையீடு செய்துள்ளார்.

அமெரிக்க குடியுரிமையை இழந்தார் கோத்தா? – கடவுச்சீட்டு ஒப்படைப்பு

gotaஅமெரிக்க குடியுரிமையை துறக்க முடிவு செய்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, தமது  அமெரிக்க கடவுச்சீட்டை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.

கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள றோய் சமாதானத்துடன் பொன்சேகா, விக்கி

அமெரிக்க நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு தொடர்பு இருப்பதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது.

அனைத்துலக சட்டங்களின்படி கோத்தாவே பொறுப்புக்கூற வேண்டும் – ஸ்கொட் கில்மோர்

அனைத்துலக சட்டங்களின்படி, சிறிலங்கா படைகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்களுக்கு கட்டளை வழங்கியவர் என்ற வகையில், கோத்தாபய ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டியவர் என்று அனைத்துலக சட்ட நிபுணர் ஸ்கொட் கில்மோர் தெரிவித்துள்ளார்.

ஐதேகவை உடைத்து மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பு? –  தயாராகிறார் மைத்திரி

வரும் நொவம்பர்- டிசெம்பர் மாதங்களுக்குள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான மற்றொரு முயற்சியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜேர்மனியில் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மீது போர்க்குற்ற வழக்கு

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக ஜேர்மனியின் அரசாங்க சட்டவாளர்கள் நேற்று போர்க்குற்ற வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாக ‘ஏபி’ செய்தி வெளியிட்டுள்ளது.