மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

தெமட்டகொடவில் இன்னொரு தற்கொலைக் குண்டுதாரி? – மரபணுச் சோதனைக்கு நடவடிக்கை

தெமட்டகொடவில் உள்ள இப்ராகிமின் வீட்டில், மற்றொரு தற்கொலைக் குண்டுதாரியும் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து முடிவு செய்ய மரபணுச் சோதனை நடத்தப்படவுள்ளது.

பதவி விலக மறுக்கிறார் சிறிலங்கா காவல்துறை மா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய, பதவியில் இருந்து விலக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர மறுப்புத் தெரிவித்துள்ளார்.  சிறிலங்கா அதிபர் செயலகத்தின் இரண்டு வட்டாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டி – 100 வீதம் உறுதி என்கிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாபய ராஜபக்ச வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் சிக்கியது

கொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில்,  இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டம் பிரகடனம் – வெளிநாட்டு உதவியைக் கோருகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் இன்று நள்ளிரவு அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்ய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடந்த தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்திய வான், கார் சிக்கின- மறைவிடங்களும் முற்றுகை

சிறிலங்காவில் நேற்று பல்வேறு இடங்களிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய நபர்களால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 207 பேர் பலி – 450 பேர் காயம் (செய்திகளின் தொகுப்பு)

சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது என சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தெமட்டகொட குண்டுவெடிப்பில் 3 சிறிலங்கா காவல்துறையினர் பலி

தெமட்டகொட பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் மூவர் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலைக் குண்டுதாரிகளே தாக்குதல் – விசாரணைகளில் தெரியவந்தது

சிறிலங்காவில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் – தெமட்டகொடவிலும் குண்டுவெடிப்பு

சிறிலங்கா முழுவதும் இன்று இரவு 6 மணி தொடக்கம்  ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.