மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

கோத்தா போட்டியிட தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றில் விரைவில் மனு

வரும் நொவம்பர் 16ஆம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி விரைவில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அதிபர் தேர்தலில் போட்டி – ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அறிவிப்பு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

கோத்தாவின் குடியுரிமை செல்லுபடியானதா? – மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு

கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையின் செல்லுபடித்தன்மையை சவாலுக்குட்படுத்தும், ரிட் மனுவொன்று, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒக்ரோபர் 9, 10 இல் கோத்தா, சஜித்தின் பரப்புரைப் பேரணிகள் ஆரம்பம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மோதவுள்ள  சஜித் பிரேமதாசவும், கோத்தாபய ராஜபக்சவும், அடுத்த மாதம் கொழும்பு காலிமுகத்திடலிலும், அனுராதபுரவிலும் தமது பரப்புரைப் பேரணிகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அதிபர் வேட்பாளராக  நாளை அறிவிக்கப்படுகிறார்

வரும் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் இயக்கத்தின் (National People’s Movement (NPM) சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ளார்.

சஜித் வேட்பாளரானதால் ஐதேமுவில் இருந்து வெளியேறியது ஜயம்பதியின் கட்சி

சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக நிறுத்த ஐதேக முடிவெடுத்துள்ளதை அடுத்து, ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து விலக, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையிலான ஐக்கிய இடதுசாரி முன்னணி முடிவு செய்துள்ளது.

சஜித்தை வேட்பாளராக நிறுத்த ஐதேக செயற்குழு அங்கீகாரம்

ஐக்கிய தேசிய முன்னணியின் அதிபர் வேட்பாளராக, சஜித் பிரேமதாசவை நிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு சற்று முன்னர் அங்கீகாரம் அளித்துள்ளது.

நிபந்தனையின்றி சஜித்தை வேட்பாளராக நிறுத்த ரணில் இணக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்நிபந்தனைகள் ஏதும் இல்லாமல், நிறுத்துவதற்கு, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை உருவாக்க தெரிவுக்குழு பரிந்துரை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு, தமது விசாரணை அறிக்கையை இறுதி செய்வதற்கான கூட்டத்தை நேற்று நடத்தியது. இதில் ஐந்து பிரதான விடயங்கள் குறித்து பரிந்துரைகளை முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐதேக வேட்பாளரை தெரிவு செய்ய வியாழன்று இரகசிய வாக்கெடுப்பு

ஐதேகவின் அதிபர் வேட்பாளரை, வரும் வியாழக்கிழமை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதற்கு, முடிவு செய்யப்பட்டுள்ளது.