மேலும்

செய்தியாளர்: புதினப்பணிமனை

அலெப்போவில் போர்க்குற்றங்கள்: சிறிலங்காவில் நேற்று, சிரியாவில் இன்று

கடந்த சில நாட்களாக சிரியாவின் அலெப்போ நகர மக்களுக்கெதிராக ரஷ்ய சிரிய அரச படைகள் மேற்கொண்டு வரும் கொடூரமான போர்க்குற்றங்கள் 2009ம் ஆண்டின்போது சிறிலங்கா அரசு ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்திய இனப்படுகொலையை நினைவுக்குக் கொண்டு வருகின்றது.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மக்கள் கவிஞர் இன்குலாப் புகழஞ்சலிக் கூட்டம்

கடந்த 01.12.2016 அன்று மறைந்த மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களுக்கான புகழஞ்சலிக் கூட்டம், புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

கச்சதீவின் புதிய தோற்றம் – ஒளிப்படங்கள்

தமிழ்நாட்டுக்கும் இலங்கைத் தீவுக்கும் நடுவே அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவில், அமைந்துள்ள அந்தோனியார  ஆலயம் அருகே புதிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிலை மாறும் உலகில் – ஒரு மேற்கத்தேய நோக்கு

“அமெரிக்க அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட ட்ரம்ப் அவர்கள் தனது ஆட்சியில் அசுரத்தன தீர்மானங்களை எடுக்க வல்லவர் என்பதை இந்த அட்டைப்படம் சுட்டிக்காட்டுகிறது” – ‘புதினப்பலகை’க்காக லண்டனில் இருந்து லோகன் பரமசாமி.

ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா

அகிலபாரதத்தின் தென்கோடியில் அமைந்துள்ள தாய்த்தமிழகத்தை, உலகமே ஏறிட்டுப் பார்க்கும் உன்னத நிலைக்கு உயர்த்தியவரும் ‘இரும்புப்பெண்மணி’ என அழைக்கப்பட்டவருமான தமிழ்நாடு முதல்வர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்த செய்தி  அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

பிடல் காஸ்ட்ரோவும் தமிழரின் உரிமை போராட்டமும்

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், உலகப் புகழ்பெற்ற புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மரணம், உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைப் போலவே, தமிழர்கள் மத்தியிலும் அதன் தாக்கம் உணரப்பட்டிருக்கிறது. ஏனென்றால், இருபதாம் நூற்றாண்டின் பின் அரைக் காலப் பகுதியில் தமிழர்கள் மத்தியில் காஸ்ட்ரோ மிகவும் பிரபலமான ஒருவராகத் திகழ்ந்தவர்.

ஆதிக்கத்துக்கு எதிராக ஆவேசக் குரல் கொடுத்த மக்கள் கவிஞர் இன்குலாப் – சில நினைவுக்குறிப்புகள்

எல்லா விதமான ஆதிக்கம், அடக்குமுறைகளுக்கும் எதிராக குரல் கொடுத்தவர் மக்கள் கவிஞர் இன்குலாப். ஈழவிடுதலைப் போராட்டத்தை வாஞ்சையோடு நேசித்தவர். முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களைக் காப்பாற்றத் தவறிய அரசின் விருதை வேண்டாம் என்று ஒதுக்கியவர்.

தமிழர் தாயகமெங்கும் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன

தமிழீழத் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் இன்று தமிழர் தாயகத்திலும், தமிழர்கள் வாழும் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர்.

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வே மாவீரர்கள் கனவை நனவாக்கும்! – ருத்ரகுமாரன்

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஏற்பாடு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய முடியும். அதற்கென உழைப்பதையே மாவீரர்கள் கனவை நனவாக்கும் என்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள மாவீரர் நாள் செய்தியில் தெரிவிததுள்ளார்.

விதையாக வீழ்ந்தோரின் நினைவில்

மாவீரர் நாள்…..! உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய இனத்தின் தமிழீழ விடுதலைத் தாகம் தணிப்பதற்காக, தமதுயிரைக் கூடத் துச்சமென எண்ணி உயிர் கொடுத்தவர்களை நினைவு கூரும் நாள் இன்று.