மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

புலிகளின் பட்டியலோடு வராவிட்டால் 58 ஆவது டிவிசன் தளபதிக்கு பிடியாணை – நீதிவான் எச்சரிக்கை

இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகளின் விபரங்களை, வரும் ஜூலை 14ஆம் நாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், சிறிலங்கா இராணுவத்தின் 58ஆவது டிவிசன் கட்டளை அதிகாரிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

உதவிகளை வழங்குவது குறித்து ஆராய அமெரிக்க உயர் அதிகாரி கொழும்பு வருகை

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், வெளிநாட்டு உதவிகளுக்கான பணியகத்தின் பணிப்பாளர், ஹரி சாஸ்திரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சம்பூரில் திரவ எரிவாயு மின் திட்டம் – மைத்திரியின் கோரிக்கைக்கு மோடி சாதகமான பதில்

சம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையத்துக்குப் பதிலாக, திரவ இயற்கை எரிவாயு மின் திட்டத்தை அமைக்குமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

உகண்டா பயணச் செலவை சிறிலங்கா அரசின் தலையில் கட்டிய மகிந்த

கடந்த வாரம் ஒரு காலைப் பொழுது,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் கைத்தொலைபேசி சில தடவைகள் ஒலித்தது. அவர் அப்போது தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் இருந்தார். கொழும்பு நகரில் மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றான, ஸ்ரான்ட்மோர் கிரசன்ட்டில் அந்த வதிவிடம், சிறிலங்காவின் விமானப்படை மற்றும் இராணுவத் தளபதிகளின் வதிவிடங்களுக்கு நடுவே உள்ளது.

பசுபிக் கட்டளைப் பீட உயரதிகாரியின் சிறிலங்கா பயணம் ஏன்? – அமெரிக்கா விளக்கம்

அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டமிடல் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ஆர் ருடர், சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டமை தொடர்பான தகவல்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

இந்தியா எதிர்ப்பு – கச்சதீவில் தேவாலயம் கட்டும் பணிகளை நிறுத்தியது சிறிலங்கா அரசு

இந்திய அரசாங்கம் எழுப்பிய கரிசனைகளையடுத்து, கச்சதீவில் புதிய தேவாலயத்தை அமைக்கும் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.

குற்றச்செயல்கள் அதிகரிப்பை நியாயப்படுத்துகிறார் வடக்கு ஆளுனர் – முன்னரும் இப்படி நடந்ததாம்

வடக்கில் முன்னரும் குற்றச்செயல்கள் இடம்பெற்று வந்ததாகவும், ஆனால் போர்க்காலத்தில் ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும், தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே.

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீட உயரதிகாரி சிறிலங்கா தளபதிகளுடன் பேச்சு

அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின்,  மூலோபாய திட்டமிடல் மற்றும் கொள்கை பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ருடர் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் மானவடுவின் மரணம் கர்மவினை என்கிறார் சரத் பொன்சேகா

மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவின் மரணம், அவரது கர்மவினை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

அமெரிக்க திறைசேரி அதிகாரிகள் வருகை – சிறிலங்காவுக்கு உதவுவது குறித்து ஆலோசனை

அமெரிக்க திறைசேரி அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.