எக்னெலிகொடவை இராணுவப் புலனாய்வுப் பிரிவே கடத்தியது – உயர்நீதிமன்றில் தகவல்
சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளாலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டார் என்பதை, நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக, மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் சரத் ஜெயமான்னே சிறிலங்காவின் உயர்நீதிமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.