மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

முடிவுக்கு வந்தது சிறிலங்கா படைகளின் ‘நீர்க்காகம்’ கூட்டுப் பயிற்சி

சிறிலங்காவின் முப்படையினரும் இணைந்து, மூன்று வாரகாலமாக மேற்கொண்டு வந்த நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

புலனாய்வு நடவடிக்கைகளை மீளாய்வு செய்யக் கூடாது – மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

சிறிலங்காவின் முதன்மையான புலனாய்வுச் சேவையான இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் வீழ்ச்சியைத் தடுக்காவிடின், நாடு கடுமையான விலையை கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன.

சிறிலங்கா குறித்தும் ஐ.நா பொதுச்சபையில் பான் கீ மூன் உரை

நியூயோர்க்கில் நேற்று ஆரம்பமான ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் நிகழ்த்திய தொடக்க உரையில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மோடியுடன் மைத்திரி தொலைபேசியில் பேச்சு – ஊரி தாக்குதலுக்கு கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 18 இந்தியப் படையினர் கொல்லப்பட்டமைக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொலைபேசி மூலம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் அடையாள அட்டையை நினைவுப்பொருளாக வைத்திருக்கும் கமால் குணரத்ன

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அடையாள அட்டையைத் தாமே நினைவுப் பொருளாக எடுத்து வைத்திருப்பதாக, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடனான இராணுவ விநியோக உடன்பாட்டை புதுப்பிக்க அமெரிக்கா விருப்பம்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவுடன் செய்து கொண்ட இராணுவ விநியோக உடன்பாட்டைப் புதுப்பித்துக் கொள்வதற்கு அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

புலிச் சந்தேகநபரைச் சுட்டுக்கொன்ற மேஜருக்கு சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு?

விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில், ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்தும், 2 மில்லியன் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ மேஜர் தர அதிகாரிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

நுழைவிசைவு விண்ணப்பத்தில் இருந்து தமிழீழத்தை நீக்குவதற்கு டென்மார்க் இணக்கம்

நுழைவிசைவுக்கு விண்ணப்பிக்கும் நாடுகளின் பட்டியலில், தமிழீழத்தை ஒரு நாடாக அங்கீகரித்திருந்தமைக்கு சிறிலங்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ள டென்மார்க், அந்தப் பட்டியலில் இருந்து தமிழீழத்தை நீக்குவதாகவும் உறுதியளித்துள்ளது.

சம்பூர் அனல் மின் திட்டத்தைக் கைவிடுவது குறித்து இந்தியாவுக்கு அறிவிக்கவில்லை

சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தை கைவிடுவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுக்கு  அறிவிக்கவில்லை என்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

எமது புதைகுழிகளை நாமே தோண்டினோம் – மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

பொது எதிரியான இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் போரிடுவதற்கு, 1980களின் இறுதியில் பிரேமதாச அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு இரகசியமாக ஆயுதங்களை வழங்கியதானது, சிறிலங்காவின் எந்தவெலாரு அரசாங்கமும் எடுத்திராத மிகவும் விரும்பப்படாத- ஆபத்தான நடவடிக்கை என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.