மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

ஈனச்செயல்களே சிறிலங்கா அரசை உலக அரங்கில் தலைகுனிய வைத்துள்ளது – சி.வி.விக்னேஸ்வரன்

எங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய கொடூரமான, மனிதத்தன்மையற்ற, இரக்கமற்ற ஈனச் செயல்களே இன்று சிறிலங்கா அரசாங்கத்தை உலக அரங்கில் தலைகுனிய வைத்துள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற்றாலே நீதி கிடைக்கும் – முதலமைச்சர்

சிறிலங்காவில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டால், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனேயே அது இடம்பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

உள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டோம் – அமெரிக்க அதிகாரிகளிடம் முதலமைச்சர் தெரிவிப்பு

தமிழின அழிப்பு, போர்க்குற்றங்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி கிடைக்கும்  என்று நம்பவில்லை. அனைத்துலக விசாரணையே வேண்டும். என்பதே, எமது மக்களின் நிலைப்பாடு என்று அமெரிக்க செனட் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

யாழ்ப்பாணத்தில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு

ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், பிரபல எழுத்தாளரும், ‘புதினப்பலகை’ நிறுவக ஆசிரியருமான- மறைந்த கி.பி. அரவிந்தன் ( பிரான்சிஸ், சுந்தர்) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு, யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தில் நடைபெறவுள்ளது.

போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக பொறிமுறை – வட மாகாணசபையில் தீர்மானம்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் வடக்கு மாகாணசபையில் முன்மொழியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மாவை, சுமந்திரன், சிறீதரன், சித்தார்த்தன், சரா வெற்றி – சுரேஸ் தோல்வி

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் விருப்பு வாக்குகளை எண்ணும் பணி நிறைவுக்கு வந்துள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வெளியாகியுள்ளது.

யாழ். மாவட்டத்தில் கூட்டமைப்பு முன்னணியில் – தீவகத்திலும் ஆதிக்கம்

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இது வரை எணணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், 1 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னணியில் இருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நடுநிலைமை – கூட்டமைப்பின் பதில் என்ன?

நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எடுத்துள்ள முடிவு அவரது தனிப்பட்ட நிலைப்பாடு என்றும், அதனை விமர்சிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன்.

பேரினவாதிகளை பாதுகாக்க வந்துள்ளவர்கள் மீது எச்சரிக்கையாக இருங்கள் – மாவை கோரிக்கை

சிங்களப் பேரினவாதிகளையும் மோசடிப் பேர்வழிகளையும் பாதுகாக்க தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்க வந்துள்ளவர்கள் மீது, எமது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா.

சமஸ்டியை நிராகரித்தால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் வாழமுடியாது – மாவை சேனாதிராசா

வடக்கு,கிழக்கு இணைந்த சமஸ்டி முறையில் அதிகாரங்களைப் பகிரும், அரசியல்தீர்வு கிடைக்காவிட்டால், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் வாழ்வது கேள்விக்குறியாகி விடும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா.