மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

யாழ்ப்பாணத்தில் ‘இந்தியா கோணர்’ திறந்து வைப்பு

யாழ். பொது நூலகத்தில் “இந்தியா கோணர்” நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதனை சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார ஆகியோர் திறந்து வைத்தனர்.

காணாமற்போனோருக்கு மரணச்சான்றிதழ் பெறுமாறு அழுத்தம் கொடுக்கும் ஆணைக்குழு

யாழ். மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பான விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு நடத்தி வரும், அமர்வில் சாட்சியமளிக்கும், உறவுகளிடம், மரணச்சான்றிதழையும், இழப்பீட்டையும் பெற்றுக் கொள்ளுமாறு ஆணைக்குழு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தியத் தளபதி வராததால், அமைதிப்படையினரின் நினைவிடத்தில் துணைத்தூதுவர் அஞ்சலி

இந்திய இராணுவத் தளபதியின் யாழ்ப்பாண வருகை ரத்துச் செய்யப்பட்டதால், இந்திய அமைதிப்படையினருக்கு, அஞ்சலி செலுத்த பலாலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் மட்டும் பங்குபற்றினார்.

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு நுழைவிசைவு வழங்க சிறிலங்கா மறுப்பு

நோர்வேயில் வசிக்கும் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு சிறிலங்கா வருவதற்கு, நுழைவிசைவு வழங்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது.

உயிரை மாய்த்த செந்தூரனுக்கு அனுதாபம் தெரிவித்து வடக்கில் பாடசாலைகள் இன்று மூடப்படும்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, தன் உயிரை மாய்த்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் செந்தூரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காய் தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்தான் மாணவன்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவர் தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

சிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா உதவும் – யாழ்ப்பாணத்தில் சமந்தா பவர்

சிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் படைக்குறைப்புக்கு காத்துக் கொண்டிருக்க முடியாது – சமந்தா பவர்

யாழ்ப்பாணத்தில் படைக்குறைப்புக்கு காத்துக் கொண்டிருக்க முடியாது என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சமந்தா பவர் – வடமாகாண ஆளுனர், முதல்வருடன் பேச்சு

ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இன்று காலை முதல் யாழ்ப்பாணத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் முதலில் வடக்கு மாகாண ஆளுனரைச் சந்தித்துப் பேசினார்.

யாழ்ப்பாணத்தின் மூத்த ஒளிப்பட ஊடகவியலாளர் கதிரவேலு காலமானார்

யாழ்ப்பாணத்தின் மூத்த ஒளிப்பட ஊடகவியலாளரான எஸ்.கதிரவேலு நேற்று, தனது 83ஆவது வயதில் அகால மரணமானார்.