மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

எதிர்ப்பை மீறி யாழ். வந்தார் மைத்திரி – முடிவை மீறி வடக்கு அமைச்சரும் நிகழ்வில் பங்கேற்பு

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்காத சிறிலங்கா அதிபருக்கு எதிராக இன்று யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

முற்றாக முடங்கியது வடக்கு மாகாணம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி இன்று நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் முற்றாக செயலிழந்தது.

வடக்கை முடக்கும் போராட்டம் இன்று

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாணத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் வெள்ளியன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு

அனுராதபுர  சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், நாளை மறுநாள் – வெள்ளிக்கிழமை- வடக்கு மாகாணத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதவி விலகினார் வடக்கு மாகாணசபை உறுப்பினர்

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த  றிப்கான் பதியுதீன் வடக்கு  மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகியுள்ளார்.

மகிந்த ஆட்சியில் வடக்கில் காணிகள் பறிக்கப்படவில்லை- என்கிறார் பசில்

2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வடக்கில் எந்தவொரு தனியார் காணியையும் அரசாங்கம் கைப்பற்றவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் 16 உறுப்பினர்கள் அடுத்தவாரம் புதுடெல்லி பயணம்

வடக்கு மாகாணசபையின் 16 உறுப்பினர்கள் புதுடெல்லிக்கு அடுத்த வாரம் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். புதுடெல்லியில் நடக்கவுள்ள கருத்தரங்குகளில் பங்கேற்கவே, வட மாகாணசபை உறுப்பினர்கள் 16 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வித்தியா கொலை வழக்கில் 7 பேருக்கு மரணதண்டனை – 3 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், 7 எதிரிகள்  குற்றவாளிகள் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பாயத்தின் மூன்று நீதிபதிகளும், தீர்ப்பளித்துள்ளனர்.

சுவிஸ் குமாரை தப்பிக்க வைக்க முயன்றார் அமைச்சர் விஜயகலா – நீதிபதி குற்றச்சாட்டு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமாரை தப்பிக்க வைக்க இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முனைந்துள்ளார் என்று நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இரண்டு நீதிபதிகள் ஒரே தீர்ப்பு – நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு ஆரம்பம்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், தீர்ப்பாயத்தின் தலைவரான, நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தனது தீர்ப்பை வாசித்து முடித்துள்ள நிலையில், தீர்ப்பாயத்தின் மற்றொரு நீதிபதியான, மாணிக்கவாசகர் இளஞ்செயழியன் தனது தீர்ப்பை படித்து வருகிறார்.