மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

அடுத்தவாரம் காங்கேசன்துறையில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது பயணிகள் கப்பல்

சிதம்பரத்தில் நடைபெறும் திருவாதிரை உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்காக, காங்கேசன்துறையில் இருந்து சென்னைக்கு பயணிகள் கப்பல் சேவையை நடத்த இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

ஒப்பரேசன் பவானுக்கு பயன்படுத்திய எம்.ஐ-8 உலங்குவானூர்திகளை நீக்கியது இந்திய விமானப்படை

சிறிலங்காவில் ‘ஒப்பரேசன் பவான்’ நடவடிக்கைக்காக இந்தியப் படையினர் பயன்படுத்திய ரஷ்ய தயாரிப்பான எம்.ஐ.-8 உலங்குவானூர்திகள் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லியின் பாதுகாப்பு கரிசனைகளை சிறிலங்கா மனதில் கொள்ள வேண்டும் – இந்தியா

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் புதுடெல்லியின் பாதுகாப்புச் கரிசனைகளை சிறிலங்கா அரசாங்கம், கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

புலிகளுடனான போர் மிகச்சிறந்த படிப்பினை – இந்திய அமைதிப்படையின் முன்னாள் தளபதி

விடுதலைப் புலிகளுக்கு எதிரான ‘ஒப்பரேசன் பவான்’ நடவடிக்கை இந்திய இராணுவத்துக்கு மிகச்சிறந்த படிப்பினையாக இருந்தது என்று, இந்திய அமைதிப்படையின் தளபதியாக பணியாற்றிய லெப்.ஜெனரல் திபெந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

போர் நல்லதல்ல – புலிகளுடன் போரிட்ட இந்தியத் தளபதி கூறுகிறார்

சிறிலங்காவில் ஒப்பரேசன் பவான் நடவடிக்கையில் ஈடுபட்டு, வலது கண்ணையும், இடதுகை விரல்களையும் இழந்த, இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரியான கேணல் அனில் கௌல் போர் நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.

சுஸ்மாவைச் சந்தித்து விட்டு கொழும்பு திரும்பினார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கூட்டுமுயற்சித் திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் – சிறிலங்கா பிரதமரிடம் வலியுறுத்தினார் மோடி

சிறிலங்காவில் இந்தியாவின் கூட்டு முயற்சித் திட்டங்களை வேகமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ராகுல், மன்மோகனுடன் இணைந்து ரணிலைச் சந்தித்தார் சோனியா

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, காங்கிஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

உறுதியான, செழிப்புமிக்க சிறிலங்காவை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவளிக்கும் – ராம்நாத் கோவிந்த்

உறுதியான, செழிப்புமிக்க சிறிலங்காவை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உறுதியளித்துள்ளார்.

மோடியைச் சந்தித்தார் ரணில்

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.