மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

இந்திய வரவுசெலவுத் திட்டத்தில் சிறிலங்காவுக்கு இரட்டிப்பு நிதியுதவி – அயல்நாடுகளுக்கு கூடுதல் நிதி

இந்திய வரவுசெலவுத் திட்டத்தில், சிறிலங்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சு மேற்கொள்ளும் உதவித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் கொல்லைப்புற ஆதிக்கம் சிறிலங்காவில் நீண்டகாலம் நீடிக்காது – சியாம் சரண்

அண்டை நாடுகளுக்குள் சீனாவின் ஊடுருவல்கள் குறித்து இந்தியா கரிசனை கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலர் சிறிலங்கா மீது கவனம் செலுத்துவார் – பிரிஐ

சிறிலங்காவுடனான உறவுகளை முன்னேற்றுவது தொடர்பாக, இந்திய வெளிவிவகாரச் செயலராகப் பதவியேற்றுள்ள விஜய் கேசவ் கோகலே கவனம் செலுத்துவார் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

புதுடெல்லியில் மங்கள – சுஷ்மா பேச்சு

சிறிலங்காவின் நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும் இடையில் புதுடெல்லியில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சிறிலங்காவை சீனாவின் பக்கம் செல்ல அனுமதிக்கக் கூடாது – இந்திய இராணுவத் தளபதி

சிறிலங்கா போன்ற நாடுகள் சீனாவை நோக்கிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்தியா செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் நகரில் இன்று ஆரம்பமாகும் தர்ம தம்ம மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவதற்காகவே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்தியா செல்லவுள்ளார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குகிறது இந்தியா

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, 45.27 மில்லியன் டொலர்கள் ( 6.9 பில்லியன் ரூபா) கடன் உதவியை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் நேற்று கையெழுத்திட்டுள்ளன.

சாணக்யபுரி மாநாட்டுக்கு சிறிலங்காவுக்கு மாத்திரம் அழைப்பு

வெளிநாடுகளில் உள்ள இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள் பங்கேற்கும் ப்ரவசி பாரதீய டிவாஸ் என்ற மாநாட்டுக்கு சார்க் நாடுகளில் சிறிலங்காவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் றோ தலைவர் நியமனம்

இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, இந்தியாவின் வெளியகப் புலனாய்வு முகவரமைப்பான றோவின் முன்னாள் தலைவரான ரஜிந்தர் கன்னா, நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தோல்வி – காங்கிரஸ்

சிறிலங்கா தொடர்பான வெளிவிவகாரக் கொள்கையில், நரேந்திர மோடி அரசாங்கம் தோல்வியடைந்து விட்டதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.