மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

இலங்கைத் தமிழ் அகதிகளும் ரொஹிங்யா அகதிகளும் ஒன்றல்ல – இந்திய மத்திய அரசு

இலங்கைத் தமிழ் அகதிகளையும், ரொஹிங்யா முஸ்லிம்களையும் ஒரே மாதிரிக் கருத முடியாது என்று இந்திய  மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் 100 மில்லியன் டொலரில் சூரியசக்தி மின் திட்டங்கள் – புதுடெல்லி மாநாட்டில் அறிவிப்பு

சிறிலங்காவில் 100 மில்லியன் டொலர்  செலவிலான இரண்டு சூரியசக்தி மின் திட்டங்கள் அமைக்கப்படவுள்ளதாக புதுடெல்லியில் நேற்று ஆரம்பமான அனைத்துலக சூரிய சக்தி கூட்டமைப்பின் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேசினார் இந்தியப் பிரதமர் மோடி

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இன்று பிற்பகல் மோடியைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

புதுடெல்லியில் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் பயணமாக இன்று புதுடெல்லியைச் சென்றடைந்துள்ளார். நாளை ஆரம்பமாகும் அனைத்துலக சூரிய சக்தி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஒரே ஆண்டில் கொழும்பு வந்த 65 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள்

சிறிலங்காவில் சீன கடற்படைக் கப்பல்களின் பிரசன்னம் அதிகமாக இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நிராகரித்துள்ளார்.

சிறிலங்கா குறித்த தவறான புரிதல்களைக் கொண்டிருந்தது இந்தியா – மகிந்த

சிறிலங்காவில் இந்தியா துறைமுகங்களைக் கட்டவோ, நெடுஞ்சாலைகளை அமைக்கவோ இந்தியா ஆர்வம்காட்டவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை குறித்து இந்தியாவுக்கு சிறிலங்கா கொடுத்துள்ள உத்தரவாதம்

அம்பாந்தோட்டை துறைமுகம் எந்தவொரு வெளிநாட்டுக் கடற்படைக்கும் வழங்கப்படாது என்று இந்தியாவுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியான அ்ட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் மாநாட்டில் பங்கேற்க இந்தியா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவுடன் உயர்மட்ட உறவுகளை எதிர்பார்க்கும் இந்தியப் பிரதமர்

சிறிலங்காவுடன் உயர்மட்டங்களிலான உறவுகளை பேணிக்கொள்ள விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.