மேலும்

செய்தியாளர்: ஐரோப்பியச் செய்தியாளர்

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு சிறிலங்காவுக்குப் பயணம்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழு இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன் லம்பேர்ட் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவே சிறிலங்கா வரவுள்ளது.

தனிநாடாக சுதந்திரப் பிரகடனம் செய்தது கட்டலோனியா

ஸ்பெய்னின் தன்னாட்சிப் பிராந்தியமான, கட்டலோனியாவின் நாடாளுமன்றம் நேற்று தனிநாடாகச் சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது. ஸ்பெயினின் மக்கள் தொகையில், 16 வீதத்தைக் கொண்ட கட்டலோனிய மக்கள், கட்டலோனியாவை தனிநாடாகப் பிரகடனம் செய்ய  வேண்டும் என்று கோரிப் போராட்டம் நடத்தி வந்தனர்.

சுவிசில் இலங்கைத் தமிழ் அகதி சுட்டுக்கொலை

சுவிட்சர்லாந்தின் பிரிசாகோ நகரில் உள்ள அகதிகள் நிலையம் ஒன்றில் நேற்று அதிகாலையில் சுவிஸ் காவல்துறையினரால் இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிறிலங்கா அதிபரிடம் இருந்து நழுவியது அமைதிக்கான நோபல் பரிசு

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, அணுஆயுதங்களை அழிப்பதற்கான அனைத்துலகப் பரப்புரை அமைப்புக்கு வழங்கப்படுவதாக ஒஸ்லோவில் நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.

நாளை சிறிலங்கா வருகிறார் பிரித்தானிய அமைச்சர் – யாழ்ப்பாணத்துக்கும் பயணம்

ஆசிய -பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட் நாளை சிறிலங்காவுக்கு  பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘புலம்பெயர் சூழலில் ஊடகமும் தாசீசியசும்’ – கிருஸ்ணா அம்பலவாணர்

உலகப்பரப்பில் ஊடகம் என்பது என்ன? அதன் பண்புகள் எவை? என்ற கேள்விகளுக்கு அவ்வளவு இலகுவாக விடை காண முடியாது. நவீன தொழில்நுட்பப் புரட்சியுடன் தோன்றிய தகவல் தொழில்நுட்பம் என்பது செய்தித்தாள் என்ற அச்சு ஊடகமாக ஆரம்பித்து இன்று வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் உள்ளிட்ட அதிவேக தகவல் பரிவர்த்தனை பரப்புக்களுக்குள் படர்ந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தும் தனித்தும் மானிடப்பரப்பை ஊடறுத்து நிற்கின்றது.

நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர்

அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

தாசீசியஸ் பவள விழா – ஒரு ஊடகனின் பார்வை

நாடகர், ஊடகர், ஏடகர் ஏ.சீ. தாசீசியஸ் அவர்களின் பவளவிழா அண்மையில் சுவிஸ் நாட்டின் லுற்சர்ன் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் கலை பண்பாட்டு நடுவம் எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் தாய்த் தமிழகத்தின் நவீன நாடக முன்னோடிகளுள் ஒருவரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமான பேராசிரியர் அ.மங்கை அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல்- சிறிலங்காவுக்கு ஐ.நா உதவிச் செயலர் கண்டனம்

சிவில் சமூகப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா மீது, மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் உதவிச்செயலர் அன்ட்ரூ கில்மோர் குற்றம்சாட்டியுள்ளார்.

சுவிசில் இன்று ஆசான் ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் பவளவிழா நிகழ்வு

நாடகம், ஊடகத்துறை விற்பன்னரும், புலம்பெயர் தமிழ் மாணவர்களுக்கான கல்வி நூல் ஆக்கப் பணிகளில் களப்பணி ஆற்றியவருமான, ஆசான் ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் பவளவிழா நிகழ்வு சுவிற்சர்லாந்தின், லுசேர்னில் இன்று நடைபெறவுள்ளது.