மேலும்

செய்தியாளர்: ஐரோப்பியச் செய்தியாளர்

ஜெனிவாவில் பூகோள கால மீளாய்வின் போது 53 பரிந்துரைகளை நிராகரித்தது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான மூன்றாவது பருவ, பூகோள கால மீளாய்வின் போது, உலக நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட 53 யோசனைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

மனித உரிமை கடப்பாடுகளை ஒரே இரவில் நிறைவேற்றி விட முடியாது – ஜெனிவா மாநாட்டில் சிறிலங்கா

மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்றும் பணிகளை ஒரே இரவில் செய்து விட முடியாது என்றும், உலகில் எந்தவொரு நாடும், இந்த விடயத்தில் சரியாகச் செயற்படும் நிலையில் இல்லை என்றும் சிறிலங்காவின் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஹர்ஷஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து ஜெனிவாவில் மீளாய்வு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவின் மனித உரிமை பதிவுகள் அடுத்தவாரம் மீளாய்வு செய்யப்படவுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பூகோள கால மீளாய்வு அமர்வு கடந்த 6ஆம் நாள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

சிறிலங்காவில் தமிழர்கள் மீது தொடரும் சித்திரவதைகள் – அம்பலப்படுத்துகிறது அசோசியேட்டட் பிரஸ்

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், தமிழர்கள் தாக்கி சித்திரவதை செய்யப்படுவதும், வல்லுறவுக்குட்படுத்தப்படுவதும் தொடர்வதாக, அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெடிற்றரேனியன் கடலில் இலங்கையர்கள் உள்ளிட்ட 764 அகதிகள், 23 சடலங்களுடன் படகு மீட்பு

மெடிற்றரேனியன் கடலில் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 764 அகதிகளுடன் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதில் 23 பேரின் சடலங்களும் இருந்ததாக இத்தாலிய கடலோரக் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு சிறிலங்காவுக்குப் பயணம்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழு இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன் லம்பேர்ட் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவே சிறிலங்கா வரவுள்ளது.

தனிநாடாக சுதந்திரப் பிரகடனம் செய்தது கட்டலோனியா

ஸ்பெய்னின் தன்னாட்சிப் பிராந்தியமான, கட்டலோனியாவின் நாடாளுமன்றம் நேற்று தனிநாடாகச் சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது. ஸ்பெயினின் மக்கள் தொகையில், 16 வீதத்தைக் கொண்ட கட்டலோனிய மக்கள், கட்டலோனியாவை தனிநாடாகப் பிரகடனம் செய்ய  வேண்டும் என்று கோரிப் போராட்டம் நடத்தி வந்தனர்.

சுவிசில் இலங்கைத் தமிழ் அகதி சுட்டுக்கொலை

சுவிட்சர்லாந்தின் பிரிசாகோ நகரில் உள்ள அகதிகள் நிலையம் ஒன்றில் நேற்று அதிகாலையில் சுவிஸ் காவல்துறையினரால் இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிறிலங்கா அதிபரிடம் இருந்து நழுவியது அமைதிக்கான நோபல் பரிசு

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, அணுஆயுதங்களை அழிப்பதற்கான அனைத்துலகப் பரப்புரை அமைப்புக்கு வழங்கப்படுவதாக ஒஸ்லோவில் நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.

நாளை சிறிலங்கா வருகிறார் பிரித்தானிய அமைச்சர் – யாழ்ப்பாணத்துக்கும் பயணம்

ஆசிய -பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட் நாளை சிறிலங்காவுக்கு  பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.