நாடாளுமன்ற கலைப்பு அரசிதழ் – அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பி வைப்பு
இன்று நள்ளிரவுடன் சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அரசிதழ் அறிவிப்பு அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால் ஒப்பமிடப்பட்டுள்ள இந்த உத்தரவு சற்று நேரத்தில் அரசிதழ் மூலம் அச்சிடப்பட்டு வெளியிடப்படவுள்ளது.