ஏப்ரல் 25இல் பொதுத் தேர்தல் – அடுத்த வாரம் வேட்புமனுத் தாக்கல்
சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 25ஆம் நாள் நடைபெறும் என்று தேசிய தேர்தல்கள் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அரசிதழில் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச கையெழுத்திட்டுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணையத்தினால் பொதுத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஏப்ரல் 25ஆம் நாள் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 12ஆம் நாள் தொடக்கம் 19ஆம் நாள் வரை, அந்தந்த மாவட்டச் செயலகங்களில் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே 14ஆம் நாள் புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறும் என்றும் தேசிய தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.