உருவானது சஜித் தலைமையிலான ‘ஐக்கிய மக்கள் சக்தி’ கூட்டணி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய கூட்டணி இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடந்த நிகழ்வில் புதிய கூட்டணியில் இடம்பெறும் ஐந்து கட்சிகளின் தலைவர்களும், 10 அமைப்புகளும் சஜித் பிரேமதாசவுடன் தேசிய உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவில்லை. எனினும், கட்சியின் 95 வீதமான அமைப்பாளர்கள் நிகழ்வில் பங்கேற்றதாக, ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பொதுச்செயலர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.