மேலும்

கைக்கு வந்தது கலைக்கும் அதிகாரம்

நாடாளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்கின்ற அதிகாரம், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இன்று கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம்,  பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்கள் முன் கூட்டியே நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம், சிறிலங்கா அதிபருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இன்று கிடைத்துள்ளது.

இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பை வெளியிட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *