பொதுத் தேர்தலில் 271,789 புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி
புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலில், 271,789 புதிய வாக்காளர்கள், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று சிறிலங்கா தேசிய தேர்தல்கள் ஆணையத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க 16, 263,885 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் 15,992,096 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், வாக்காளர்களின் எண்ணிக்கை 271,789 பேரால் இம்முறை அதிகரித்துள்ளது,
அதிகளவில் புதிய வாக்காளர்களைக் கொண்ட மாவட்டங்களாக கொழும்பு, கம்பகா ஆகியன உள்ளன.
இம்முறை கொழும்பு மாவட்டத்தில், 1,785,964 வாக்காளர்களும், கம்பகா மாவட்டத்தில் 1,709,209 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வன்னி, திருகோணமலை, பொலன்னறுவ ஆகிய மாவட்டங்கள் குறைந்தளவு வாக்காளர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்களாக உள்ளன.