மேலும்

Tag Archives: மாகாணசபை

13க்கு அப்பால் தமிழர்களுக்கு எதையும் கொடுக்கமாட்டோம் – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் எதையும் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த.

13க்குள் தான் அரசியல் தீர்வாம் – இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறுகிறார் மகிந்த

சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்துக்குள்- மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும், அரசியல் தீர்வு ஒன்று, ஆட்சியமைத்து ஆறுமாதங்களுக்குள் முன்வைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க வடக்கு மாகாணசபைக்கு அனுமதி அளித்தார் மைத்திரி

முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க வடக்கு மாகாணசபைக்கு அனுமதி அளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று சிறிலங்கா அதிபருக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போதே, இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் போதைப்பொருளை பழக்கப்படுத்தியது சிறிலங்கா இராணுவமே – முதலமைச்சர் குற்றச்சாட்டு

இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழேயே வடக்கில் போதைப்பொருளுக்கு மக்கள் பழக்கப்படுத்தப்பட்டனர். இதற்கு சிறிலங்கா இராணுவத்தினரே பொறுப்புக் கூற வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அசோக வடிகமங்காவவும், மைத்திரியுடன் இணைந்தார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல் மாகாணசபை உறுப்பினரான அசோக வடிகமங்காவ, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேவுடன் இணைந்து கொண்டுள்ளார்.

கிராமப்புறங்களில் ஆட்டம் காணத் தொடங்கியுள்ள மகிந்த

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தற்போது கிராமிய மட்டத்தில் ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டக்ளஸ் தேவானந்தாவே தாக்குதலுக்கு முழுப்பொறுப்பு – முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட  குழப்பங்களுக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், அவர் தன்னுடன் அழைத்திருந்த, சம்பந்தமில்லாத வெளியாட்களுமே காரணம் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.