மேலும்

Tag Archives: இரா.சம்பந்தன்

பொறுப்புக்கூறல் விவகாரங்களைத் துரிதப்படுத்துவதாக ஐ.நா சிறப்பு நிபுணரிடம் மைத்திரி வாக்குறுதி

பொறுப்புக்கூறல் விவகாரங்களை துரிதமாக முன்னெடுப்பதாக ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப்பிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாடாளுமன்றில் பிரேரணை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தாமதமின்றி, விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சமர்ப்பிக்கவுள்ளார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து சிங்கள மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை – சம்பந்தன்

அரசியலமைப்பின் ஊடாக பிரிவினையை தடுக்கும் உறுதிப்பாடு வழங்கப்படுவதால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவதை சிங்கள மக்கள் அச்சத்துடன் நோக்க வேண்டியதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இடைக்கால அறிக்கை – என்ன சொல்கிறார் சம்பந்தன்?

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முன்னேற்றகரமாக இருக்கின்றன.  ஆனால் இது இறுதி முடிவல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இடைக்கால அறிக்கை குறித்து பங்காளிக் கட்சிகளுடன் ஆலோசனை – மாவை சேனாதிராசா

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக பங்காளிக் கட்சிகள், மற்றும் தமிழ் புலமையாளர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தவுள்ளது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை என்பன தொடர்பாக முடிவுகளை எடுப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்தார் மகிந்த

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த கோரிக்கையை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்து விட்டார்.

மகிந்தவின் அரசியல், இந்தியாவுடனான கூட்டமைப்பின் உறவு குறித்து அமெரிக்கா கரிசனை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் செயற்பாடுகள் மற்றும் இந்தியாவுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறவுகள் தொடர்பாக அறிந்து கொள்வதில், அமெரிக்கா ஆர்வத்தை வெளிப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

சம்பந்தனைப் பாராட்டிய அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்

பிரதான கொள்கையில் நீங்கள் உறுதியாக இருக்கின்றீர்கள்  என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்,  பாராட்டியுள்ளார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அதிபருக்கு சம்பந்தன் கடிதம்

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட நான்கு வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதமொன்றில் தெரிவித்துள்ளார்.