கிழக்கு முதல்வர் மீது விசாரணை நடத்தக் கோருகிறார் மகிந்த
சிறிலங்கா கடற்படை அதிகாரியான கப்டன் பிரேமரத்னவை மோசமாகத் திட்டிய, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் முகமட்டை விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.