மேலும்

செய்தியாளர்: Vanni

இராணுவ முகாம் முன் போராட்டத்தில் குதித்தனர் கேப்பாப்புலவு மக்கள்

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில் சிறிலங்கா இராணுவத்தினரின் பிடியில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், இன்று சிறிலங்கா படைமுகாம் வாயிலில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்?’ – சிறிலங்கா அதிபரிடம் முல்லைத்தீவில் கேள்வி

‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முள்ளியவளையில் போராட்டம் நடத்தினர்.

பளையில் முன்னாள் போராளி கைது

பளை – கரந்தாய் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெடுங்கேணியில் இராணுவ வாகனம் கவிழ்ந்து மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்குச் சென்ற இராணுவ வாகனம், முல்லைத்தீவில் விபத்துக்குள்ளானத்தில், அதில் பயணம் செய்த மேஜர் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் பலியாகினர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

முல்லைத்தீவு செல்கிறார் சிறிசேன – எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஏற்பாடு

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வார நிகழ்வுகளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

மர்மநபரை தேடி சிறிலங்கா படையினர் பாரிய தேடுதல்

ஆயுதங்கள் அடங்கிய பொதியொன்றை வீசி விட்டுத் தப்பிச் சென்றார் எனக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை தேடி சிறிலங்கா இராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நேற்று பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரம் ஆக அதிகரிப்பு

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால், 14 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மரத்தில் சிக்கியிருந்தவர்களும், பிறந்து சில நாட்களேயான குழந்தையும் மீட்பு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், வெள்ளத்தில் சிக்கியிருந்த பலர் சிறிலங்கா கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மன்னார் புதைகுழி எலும்பு மாதிரிகள் புளோரிடாவுக்கு – விமான நிலையங்களுக்கு அறிவிப்பு

மன்னார் – சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் வரும் ஜனவரி மூன்றாவது வாரம், காபன் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளது.

வன்னியில் கொட்டிய பெருமழை – கிளிநொச்சி கிராமங்கள் வெள்ளக்காடு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கொட்டிய கடும் மழையினால், குளங்கள் நிரம்பி, வெள்ளநீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இதனால், பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.