மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி – குற்றச்சாட்டை விசாரிக்கக் கோருகிறார் கோத்தா

புனர்வாழ்வின் போது, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரச மருத்துவர்களைக் கொண்டு உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாலம் அமைக்கும் தேசத்துரோகத்தை அரசாங்கம் செய்யாது – என்கிறார் சிறிலங்கா அதிபர்

இந்தியா – சிறிலங்கா இடையில் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு சிறிலங்கா இணங்கியிருப்பதாக வெளியாகும் தகவல்களில் எந்த உண்மையும் கிடையாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு வந்தார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்காக உதவிச் செயலர் சார்ள்ஸ் எச்.றிவ்கின் இரண்டு நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.

மைத்திரி, ரணில், சம்பந்தனை இன்று சந்திக்கிறார் நோர்வே பிரதமர்

விடுமுறையைக் கழிப்பதற்காக தனிப்பட்ட பயணமாக கடந்தவாரம் சிறிலங்கா வந்திருந்த நோர்வே பிரதமர் எர்ணா சொல்பேர்க், இன்று சிறிலங்கா அரச தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

சிறுபான்மையினருக்கு எதிராக குற்றமிழைத்தவர்களை கைது செய்ய வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்காவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும், எல்லா மக்களினதும் மத சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், உயர்மட்ட அரசாங்கத் தலைவர்களும் முன்வர வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது.

செயலணிக்குள் விக்னேஸ்வரனை சேர்க்க முடியாது – ரணில் திட்டவட்டம்

வடக்கு மாகாணத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணியில் வடக்கு மாகாண முதலமைச்சரை உள்ளீர்ப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது.

எட்கா உடன்பாடு குறித்துப் பேச சிறிலங்கா வருகிறார் இந்திய வர்த்தக அமைச்சர்

எட்கா உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு இந்தியாவின் வர்த்தக அமைச்சர் வி்ரைவில் சிறிலங்கா வருவார் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்கள் – வெளிநாட்டு மருத்துவர்களைக் கொண்டு விசாரணை?

புனர்வாழ்வின் போதும், அதற்குப் பின்னரும் இடம்பெற்று வரும், முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்கள் தொடர்பாக வெளிநாட்டு மருத்துவர்களைக் கொண்டு விசாரணை செய்யப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் பணியகம் சிறிலங்கா படையினருக்கு எதிரானது அல்ல – மனோ கணேசன்

காணாமற்போனோர் தொடர்பான பணியகம், சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரானதாகப் பயன்படுத்தப்படாது என்று சிறிலங்காவின் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

78 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 தமிழ் அரசியல் கைதிகள், நேற்றுக்காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.