மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

அமைச்சர்களின் சிறகை வெட்டும் மைத்திரி – ஐதேகவுக்கு எதிராக புதிய போர்

அமைச்சர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்கள் தொடர்பாக பரிசீலிப்பதற்காக, தனது செயலர் உதய செனிவிரத்ன தலைமையிலான குழுவொன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

அனைத்து ஆளுனர்களையும் பதவி விலக உத்தரவு

அனைத்து மாகாணங்களினதும் ஆளுனர்களை உடனடியாக பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

உட்கட்சிப் பூசல் – சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூட மைத்திரி உத்தரவு

வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தான் நாடு திரும்பும் வரை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மாந்தையில் சீன குழுவினர் அகழ்வாய்வு

மன்னார் மற்றும் மாந்தை துறைமுகங்கள் ஊடாக சிறிலங்காவுடன் சீனர்கள் மேற்கொண்ட பண்டைய வணிகம் தொடர்பாக, சீன மற்றும் சிறிலங்கா தொல்பொருள் ஆய்வாளர்கள் கூட்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

வன்னியைப் புரட்டிப் போட்ட வெள்ளம் – 10 ஆயிரம் பேர் பாதிப்பு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவு தொடக்கம், கொட்டிய பெருமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தினால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

சம்பந்தனின் கையில் செயலகம் – மகிந்தவின் இக்கட்டான நிலை

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான இழுபறிக்கு இன்னமும் முடிவு காணப்படாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் இன்னமும், இரா.சம்பந்தனின் பொறுப்பிலேயே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 29 புதிய அமைச்சர்கள்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் 29 அமைச்சர்கள் இன்று முற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

அமைச்சரவை பதவியேற்பு ஆரம்பம் – ஊடகங்களுக்கு இருட்டடிப்பு

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு தற்போது, மூடப்பட்ட அறைக்குள் இடம்பெற்று வருகிறது.

சட்டம், ஒழுங்கு, ஊடகத்துறை அமைச்சுக்களால் இழுபறி – அடம்பிடிக்கிறார் மைத்திரி

புதிய அமைச்சரவை இன்று காலை பதவியேற்கவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் ஊடகத் துறை அமைச்சு என்பன தொடர்பாக இழுபறி நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை காலை பதவியேற்கிறது புதிய அமைச்சரவை

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நாளை காலை 8.30 மணியளவில், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.