மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

முரண்பாடான சாட்சியம் – தெரிவுக்குழுவை தவறாக வழிநடத்த முயன்ற சிறிலங்கா அதிபர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக, இரண்டு விடயங்களில் முரண்பாடான கூற்றுக்களை முன்வைத்து- சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவை  “வேண்டுமென்றே தவறாக வழிநடத்தியுள்ளார்” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறன்று இந்திய தூதரகமும் இலக்கு

கொழும்பில் உள்ள இந்திய தூதரகமும், இந்தியர்கள் அடிக்கடி வந்து செல்லும் விடுதி ஒன்றும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளால் இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக, 21/4 தாக்குதல் குறித்து விசாரித்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் புதிய அரசுக்கு மனித உரிமை அழுத்தங்கள் தொடரும் – அமெரிக்கா

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் விவகாரம் குறித்து தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு கணிசமாக குறையும் – அமெரிக்கா

மோசமான மனித உரிமை மீறல் குற்றம்சாட்டுகளுக்கு உள்ளானவரை, இராணுவத் தளபதியாக நியமித்திருப்பது, சிறிலங்காவுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கணிசமாகக் குறைக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான றொபேர்ட் டெஸ்ரோ தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டமாக திருச்சியில் இருந்து பலாலிக்கு விமான சேவை

சென்னை மற்றும் திருச்சியில் இருந்து, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்குப் பறக்கும் வணிக விமானங்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் திருச்சியில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறை முக்கிய பங்கு வகிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை ஆரம்பிப்பதற்கு சிறிலங்கா விமானப்படைத் தளபதி ஒத்துழைக்கவில்லை என்றும், இந்திய தொழில்நுட்ப குழுவுக்கு தேநீர் கூட வழங்க மறுத்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகநூல் ‘உள்பெட்டி’ தகவல்களும் கண்காணிப்பு

சிறிலங்காவில் முகநூல் பயன்படுத்துனர்களால் உள்பெட்டியில் (inbox) பரிமாறப்படும் தகவல்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக, முகநுநூல் சமூக ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடக்கில் வெற்றியை உறுதிப்படுத்த முன்னாள் தளபதிகளை களமிறக்கினார் கோத்தா

யாழ்ப்பாணத்தில் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக, முன்னாள் படைத் தளபதிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

5 தமிழ் கட்சிகளின் ஆவணம் – ஓடி ஒளியும் அதிபர் வேட்பாளர்கள்

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் பேசுவதற்காக ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து, 13 கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை தயாரித்துள்ள நிலையில், பிரதான வேட்பாளர்கள் எவரும், பேச்சுக்களை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கு வந்த முதல் பயணி

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமான – யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் கடந்த 17ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.