மேலும்

செய்தியாளர்: ரூபன் சிவராசா

‘தமிழர் தளம்’ – தாயகத்தில் இருந்து வெளிவரும் புதிய ‘மாதமிருமுறை இதழ்’

தமிழர் தளம் எனும் பெயரில் தாயகத்திலிருந்து புதிய ‘மாதமிருமுறை இதழ்’ வெளிவர ஆரம்பித்துள்ளது.  இதன் முதலாவது இதழ், கடந்த 20.08.17 அன்று நல்லூர் தேர்த்திருவிழாவில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்கள் நீதியுடன் கூடிய அரசியல் தீர்வை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பு அவசியம்

ஈழத்தமிழ் மக்கள் கோரி நிற்பது நீதியுடன் கூடிய அரசியல் தீர்வு. அதனை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பினைத் தமிழ் மக்கள் உருவாக்கித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பேராசிரியர் இராமு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நோர்வே தமிழ் 3இன் தமிழர் மூவர்-2017 – இளைய பல்துறை ஆளுமையாளர்கள் மதிப்பளிப்பு

Entrepreneurship எனப்படும் துறையில் மிக இளவயதில் (19) தடம்பதித்து வரும் மயூரன் லோகநாதன், மருத்துவரும் உலகளாவிய சுகாதாரம் மற்றும் எயிட்ஸ் நோய்த்தடுப்பு சார்ந்து மிகுந்த ஈடுபாடு உள்ளவரான ஆரணி மகேந்திரன், தமிழ் பாரம்பரிய வாத்திய இசைவடிவங்களுடன் மேற்கத்திய இசைவடிங்களை இணைத்து புத்தாக்க இசைப்படைப்புகளை வழங்கி வரும் மீரா திருச்செல்வம் ஆகியோருக்கு 2017ஆம் ஆண்டுக்கான தமிழ் 3இன் தமிழர் மூவர் விருது வழங்கப்பட்டுள்ளது.

நிலமும் புலமும் நலவாழ்வும் – தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் தொடக்க நிகழ்வில் கலந்துரையாடல்

தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் (Tamil-Norwegian Resource Association) தொடக்க நிகழ்வும் கலந்துரையாடலும் (6-5-17) சனிக்கிழமை ஒஸ்லோவில் இடம்பெற்றது. மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

நோர்வே ‘தமிழ் 3′ வானொலியின் தமிழர் மூவர் – 2017 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்

நோர்வே தமிழ் 3 வானொலி, நோர்வேஜிய தமிழ்ச் சமூக இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து, துறைசார் பேராளுமையாளர்களாகத் திகழ்கின்ற, முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய 3 பெண்கள் அல்லது ஆண்களை ஒவ்வோராண்டும் தேர்ந்தெடுத்து மதிப்பளித்து அடையாளப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது.

விமானத்தளங்களின் சாபங்கள்- ட்ரம்ப் இட்ட கோட்டினால் அநீதிக்கு இலக்காகப் போகும் குழந்தைகள்

பாரபட்சங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் குணவியல்பு தொடர்பாகத் தனது தந்தை பேராசிரியர் ந.சண்முகரட்ணம் அவர்களிடமிருந்து தனது சிறுவயதில் பெற்றுக்கொண்ட சில அனுபவங்களையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் Klassekampen  நாளிதழில் 03.02.17 எழுதிய இப்பதிவில் நினைவு கூர்ந்திருக்கின்றார்.

பிரான்ஸ் ‘புலம்பெயர் தமிழர் திருநாள் 2017’ – பண்பாட்டு அடையாள நிகழ்வு

பிரான்ஸ் ‘சிலம்பு’அமைப்பின் ‘புலம்பெயர் தமிழர் திருநாள்’ஒருபண்பாட்டு விழாவிற்குரிய அடையாளப்படுத்தலுடன் (14-01-2017) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தைப்பொங்கலென்பது இயற்கையுடன் இணைந்த வாழ்வை நினைவுகூரும் கூட்டுநிகழ்வு, இயற்கைக்கு நன்றி செலுத்தும் பண்பாட்டின் வெளிப்பாடு.இதற்குள் மதம் இல்லை. வேறெந்தப் பாகுபாடுகளுக்குமுரிய கூறுகளும் இல்லை.

நோர்வேயில் ’புதிய கடவுச்சீட்டு விதி முறை’ – வெளிநாட்டுப் பின்னணியுடையோர் பாதிப்பு

நோர்வேயில் ’புதிய கடவுச்சீட்டு விதி முறை’ காவல்துறை திணைக்களத்தினால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட, அதேவேளை பல பத்து ஆண்டுகளாக ’நோர்வேஜியக் குடியுரிமை’ பெற்றிருந்தவர்களின்  ‘பிறந்த இடம்’  கடவுச்சீட்டிலிருந்து நீக்கப்படுகின்றது.

கி.பி. அரவிந்தன் முதலாவது ஆண்டு நினைவேந்தல் பற்றிய ஓர் பகிர்வு – ரூபன் சிவராஜா

ஈழ விடுதலைப்போராட்ட முன்னோடி, சிந்தனையாளர், கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர் எனத் தமிழ்ச் சூழலில் பன்முக வகிபாகம் கொண்டிருந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 26.03.16 சனிக்கிழமை நடைபெற்றது.

கி.பி.அரவிந்தன் எனும் ஆளுமையின் 1ஆவது ஆண்டு நினைவாக… – நேர்காணல்: பகுதி 3

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடி,கவிஞர், எழுத்தாளர் கி.பி.அரவிந்தன் அவர்களுடன் 2014இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் உரையாடல்.  நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா.