மேலும்

செய்தியாளர்: புதினப்பணிமனை

19ஆவது திருத்தம் ஜனநாயகம், நல்லாட்சியை உறுதிப்படுத்தும் – நாடாளுமன்றத்தில் சம்பந்தன்

19ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்துக்கு வழிகோலுவதுடன், நல்லாட்சியையும் உறுதிப்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழ்க்கல்வி – முயற்சிகளும் சவால்களும்: நோர்வேயில் ஆய்வரங்கு

புலம்பெயர் தமிழ்க் கல்வி தொடர்பான ஆரோக்கியமான கருத்தாடலுக்கான ஆய்வரங்கு ஒன்றினை நோர்வே தமிழ் 3 வானொலி எதிர்வரும் மே 1ஆம் நாள் (வெள்ளிக்கிழமை), மாலை 5 மணிக்கு ஒஸ்லோவில் ஏற்பாடு செய்துள்ளது.

பிரபாகரன் தப்பிச்செல்ல வழிவிட்டதா இந்திய அமைதிப்படை?- கேணல் ஹரிகரன் பதில்

தனக்குத் தெரிந்தவரையில், இந்திய அமைதிப்படையினரால், ஒரே ஒருமுறை மாத்திரமே, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மறைவிடத்தை நெருங்க முடிந்ததாகவும், ஆனால் அவர் அதற்கு முன்னரே தப்பிவிட்டதாகவும், இந்திய அமைதிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு விவகாரத்தை சிறிலங்கா அரசாங்கம் கிடப்பில் போட அனுமதியோம் – இரா.சம்பந்தன்

அரசியல் தீர்வு சம்பந்தமாக புதிய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு காலஅவகாசம் தேவை என்பது உண்மையே என்றாலும், அதற்காக தீர்வு விடயங்களை கிடப்பில் போடுவதை நாம் அனுமதிக்கமாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் குறுக்குவழியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது – ஐ.நா அறிக்கையாளர்

சிறிலங்காவில் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தீர்வு காண சில நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டாலும், செய்ய வேண்டியவை இன்னும் நிறைய இருப்பதாக ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.

வல்லமை தாராயோ…!

நட்டாற்றில் விடப்பட்டது போல், இரண்டாவது தடவை நாம் உணர்ந்து, இன்றோடு ஒரு மாதம். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், முள்ளிவாய்க்கால் பேரழிவு முதல்முறையாக எம்முள் அந்த உணர்வை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மைத்திரி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – இரா.சம்பந்தன்

மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டுவதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

சீன-அமெரிக்க-இந்திய உறவுகளின் பண்புகள் – ஓர் ஒப்பீடு- II

சீனாவை சர்வதேச விவகாரங்களில் தலையிட வைக்கும் அல்லது ஈடுபாட்டை உருவாக்கத் தூண்டும் மேலைத்தேய தந்திரோபாயத்தில், சிறீலங்காவின் சிறுபான்மை இனமாக காட்டப்படும் தமிழினமும் சிக்குப்பட வாய்ப்புகள் பல உள்ளன. ‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி.

மகிந்த குடும்பத்தின் முக்கிய நபர் காணாமற்போனார்

ரஸ்யாவில் சிறிலங்கா தூதுவராக இருந்தவரும், சிறிலங்கா தூதரகம் அருகே தேனீர் வியாபாரம் செய்து வந்தவருமான, மகிந்த ராஜபக்சவின் மருமகனான உதயங்க வீரதுங்கவைக் காணவில்லை என்று, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் 8 மாவட்டங்களிலும் போராட்டம்

சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் உள்நாட்டு விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும், இன்று வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.