வீழ்வதற்கு அல்ல நிமிர்வதற்கு….!
மீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவைச் சந்தித்து நிற்கிறது ஈழத்தமிழினம். விரும்பியோ விரும்பாமலோ, இதனை எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயம். இது சிறிலங்கா நாடாளுமன்றத்தின் ஆசனங்களை நிரப்புவதற்கான தேர்தல்.
மீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவைச் சந்தித்து நிற்கிறது ஈழத்தமிழினம். விரும்பியோ விரும்பாமலோ, இதனை எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயம். இது சிறிலங்கா நாடாளுமன்றத்தின் ஆசனங்களை நிரப்புவதற்கான தேர்தல்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன.
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் எந்த வேட்பாளரையும் ஆதரித்து பரப்புரை செய்யப் போவதில்லை என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ள முடிவு தொடர்பாக, தேர்தல் முடிந்த பின்னர் அவருடன் பேசுவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய தனது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்தி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
எந்த உலக தலைவர்கள் இலங்கைத்தீவிற்கு சென்றாலும் இரு நிர்வாக அலகுகளாக கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் கையாளுவது கவனிக்கத்தது. சர்வதேச இராசதந்திர விதிமுறைகளின் கீழ் யாழ்ப்பாணத்துக்கு சமகௌரவம் தரப்படுவது, சர்வதேச செல்வாக்கை பெறுவதற்கு உரிய திறவுகோலாக தமிழ் தலைமைத்துவம் எடுத்து கொள்வதில் தவறேதுமில்லை – புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி.
மிரிஹான பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் சிறிலங்கா இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்து வந்தது என்றும், அதிலிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்குச் சொந்தமானது என்றும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் நீடித்திருக்கும் இனப்பிரச்சினைக்கு, தற்போதுள்ள அரசியலமைப்பின் மூலம் தீர்வு காண முடியாது என்றும், அனைத்து சமூகத்தினரும் இணைந்து வாழ புதிய அரசியலமைப்பு ஒன்றே அவசியம் என்றும் தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கவே, அவர் போட்டியிடும் குருநாகல மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுவதாக, வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், கடந்த ஓரிரு நாட்களில் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் கட்சி தாவியுள்ளனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில், காணாமற்போனவர்கள் மற்றும் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை, இன்னும் இரண்டு மாதங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவிடம் தெரிவிக்கும் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.