மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஐ.நாவின் தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டு பொறிமுறை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்,  தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டு பொறிமுறை மூலம், மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்புக்கூறலைத் தொடர சிறிலங்கா அரசாங்கம் தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.

2027 வரை சிறிலங்காவை கண்காணிக்க கோருகிறது புதிய தீர்மான வரைவு

சிறிலங்காவை மேலும் இரண்டு ஆண்டுகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் கண்காணிப்பில் வைத்திருக்க கோரும் புதிய தீர்மான வரைவு ஒன்றை அனுசரணை நாடுகள் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிகாரிகள் இன்று அனுரவுடன் சந்திப்பு

இருதரப்பு வர்த்தகம் குறித்து பேச்சு நடத்துவதற்காக சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அதிகாரிகள், இன்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளனர்.

ஆட்சிக் கவிழ்ப்புகளில் சமூக ஊடகங்கள் – ரணில் எச்சரிக்கை

ஆட்சிக் கவிழ்ப்புகளில் சமூக ஊடகங்களின் பங்கு இருப்பதன் ஆபத்து குறித்து சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

ரவிராஜ் கொலை வழக்கில் தப்பிய முன்னாள் காவல்துறை அதிகாரி தேடப்படுகிறார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரை தேடி வருவதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா எந்தவொரு உள்நாட்டுப் பொறிமுறையையும் முன்மொழியவில்லை

சிறிலங்கா அரசாங்கம் போர்க்கால மீறல்கள் தொடர்பாக உள்ளக விசாரணை மட்டுமே நடத்தப்படும் என அறிவித்திருந்தாலும், எந்தவொரு நம்பகமான உள்நாட்டுப் பொறிமுறையையும் முன்மொழியவில்லை என அனைத்துலக ஊடகமான ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து பிரித்தானியா கவலை

அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்த, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து பிரித்தானியா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச தரத்துடன் விசாரணைகள் நடக்க வேண்டும் – அனுசரணை நாடுகள்

மனிதப் புதைகுழிகள் குறித்த விசாரணைகள் அனைத்துலக தரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவது முக்கியம் என்று சிறிலங்கா குறித்த அனுசரணை நாடுகளின் குழு வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவின் குற்றவாளிகள் மீது அனைத்துலக தடைகளை விதிக்குமாறு கோரிக்கை

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த வகையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது, மேலும் தடைகளை விதிக்குமாறு ஐ.நா  மனித உரிமைகள் ஆணையாளர், வோல்கர் டர்க் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனிவாவில் நாளை சிறிலங்கா குறித்த அறிக்கை மீது விவாதம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஜெனிவாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.